ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா – நாங்க
எண்ணி வந்த வரம் கொடுக்க வாருமம்மா
ஆயிரம் கண் படைச்சவளே பாரம்மா – இங்கு
உன்னை அன்றி வேறு கதி ஏதம்மா
ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா – நாங்க
எண்ணி வந்த வரம் கொடுக்க வாருமம்மா
ஆயிரம் கண் படைச்சவளே பாரம்மா – இங்கு
உன்னை அன்றி வேறு கதி ஏதம்மா
சமயபுரம் சன்னதியின் வாசலிலே
லோக சங்கரியே உருகி நின்றோம் பூஜையிலே
கருணை உள்ள தெய்வமாக நீ இருப்பாய்
நாங்க கொண்டாட வந்ததற்கும் பலன் கொடுப்பாய்
ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா – நாங்க
எண்ணி வந்த வரம் கொடுக்க வாருமம்மா
ஆயிரம் கண் படைச்சவளே பாரம்மா – இங்கு
உன்னை அன்றி வேறு கதி ஏதம்மா
வேண்டுவோர்க்கு வாழ்வெல்லாம் நலம் தருவாய்
சிங்க வாகனத்தில் சக்தியாக வலம் வருவாய்
ஊர் வாழ மழையாக வடிவெடுப்பாய் – இந்த
உலகத்துக்கே உன் அருளால் குடை பிடிப்பாய்
ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா – நாங்க
எண்ணி வந்த வரம் கொடுக்க வாருமம்மா
ஆயிரம் கண் படைச்சவளே பாரம்மா – இங்கு
உன்னை அன்றி வேறு கதி ஏதம்மா
வடவேட்டு எல்லையிலே குடி இருப்பாய்
நல்ல பத்தினிகள் மஞ்சளுக்கு துணை இருப்பாய்
மங்களங்கள் பெருக வேணும் சக்தியிலே – அதை
குங்கமமாய் தரவேணும் நெத்தியிலேல
ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா – நாங்க
எண்ணி வந்த வரம் கொடுக்க வாருமம்மா
ஆயிரம் கண் படைச்சவளே பாரம்மா – இங்கு
உன்னை அன்றி வேறு கதி ஏதம்மா
ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா – நாங்க
எண்ணி வந்த வரம் கொடுக்க வாருமம்மா
ஆயிரம் கண் படைச்சவளே பாரம்மா – இங்கு
உன்னை அன்றி வேறு கதி ஏதம்மா