திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவின் 3ஆம் நாளான இன்று சுவாமி குமரவிடங்கப் பெருமான் முத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்தனர்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா புதன்கிழமை தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் காலையும், மாலையும் சுவாமி – அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெறுகிறது. திருவிழாவின் 3 ஆம் நாளான இன்று காலை மேலக்கோயிலிலிருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் பூங்கோயில் சப்பரத்திலும், தெய்வானை அம்மன் கேடயச் சப்பரத்திலும் எழுந்தருளி உலா வந்து மேலக்கோயில் சோ்ந்தனர்.
மாலையில் மேலக்கோயிலிலிருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்கமுத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதியுலா வந்ததனர். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் பா. விஷ்ணுசந்திரன், தக்காா் இரா. கண்ணன் ஆதித்தன், உதவி ஆணையா் வே. செல்வராஜ், கோயில் பணியாளா்கள் செய்தனர்.
அன்னிய மோகத்தால் சீரழியும் ஹிந்து குடும்ப அமைப்பும், அதை மீட்கும் வழியும் அறிமுகம் இன்றைய சமூக அமைப்பு மாறிவரும் உலக அரசியல், பொருளாதார மற்றும் கலாசார தாக்கங்களால்...
அன்னிய மோகத்தால் சீரழியும் ஹிந்து குடும்ப அமைப்பும், அதை மீட்கும் வழியும் அறிமுகம்: இன்றைய உலகம் வேகமாக மாறி வருகிறது. மனிதன் வாழ்வில் அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன்...
கன்யாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம் திருவிதாங்கோடு நகரில் உள்ள சிவன் கோயில். மூலவர் பிரதிபனி லிங்க வடிவில் உள்ளார். கோயில் வளாகத்தில் சிவன் மற்றும் திருமால் கோயில்கள்...
ஸநாதனம் - ஒரு சவால் அழியாதது ஸநாதனம் எனும் ஸம்ஸ்க்ருத வார்த்தைக்கு என்றும் உள்ளது என்பது பொருள். என்றும் உள்ளது எனும்பொழுது அழியாதது என்பது தெளிவு. அழியாதது...
நெல்லி மரத்தை வீடு மற்றும் தோட்டத்தில் வளர்ப்பதின் ஆன்மீக, பரம்பரிய மற்றும் துறவறக் குணங்களின் விரிவான விளக்கம் நெல்லி மரத்தின் முக்கியத்துவம் நெல்லி மரம் என்பது பாரம்பரிய...
வாரத்தின் முதல் நாள் ஞாயிறு: ஒரு விரிவான ஆய்வு வாரத்தின் முதல் நாளாக ஞாயிற்றுக்கிழமை (Sunday) இருக்கும் காரணம் ஆன்மீக, ஜோதிட, சாஸ்திர மற்றும் தொல்பொருளியல் அடிப்படையில்...