‘தமிழ்நாட்ற்கு அதிகமாக தடுப்பூசி கொடுங்க’ : மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்த MLA வானதி சீனிவாசன்..! Source text ‘Give more vaccine to Tamil Nadu’: MLA Vanathi Srinivasan made a request to the Union Minister ..!
தமிழக அரசு கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டில் பாரபட்சம் பார்க்கிறது என்ற குற்றச்சாட்டு சமீப காலமாக எழுந்து வந்துள்ளது. குறிப்பாக ஸ்டாலின் கோவைக்கு மிகவும் குறைவான தடுப்பூசியே வழங்குகிறார் என்று கோயம்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் குற்றம்சாட்டினார்.
இதனால் அவர் நேரடியாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனிடம் தடுப்பூசியை வழங்குமாறு கோரிக்கை வைத்து, தொகுதி மக்களுக்கு தேவையான தடுப்பூசியை அளிக்குமாறு கோரிக்கை அளித்தார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று ஹர்ஷவர்தனை நேரில் சந்தித்து அவரிடம் கடிதம் வழங்கினார். அந்த கடிதத்தில் “இந்த ஜூன் மாதத்தில் தமிழகத்திற்கு 42.58 லட்சம் தடுப்பூசிகளை ஒதுக்கிய உங்களுக்கு எனது நன்றிகள். தமிழகம் தொழில்துறை மாநிலமாக விளங்குவதால் இங்கு அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளுக்கு அதிக தடுப்பூசி தேவை படுகிறது. தொழில் துறையில் இருக்கும் பலர் கொரோனாவால் பாதிக்க படுவதால் தமிழகத்தின் பொருளாதாராத்தை பாதித்துள்ளது. அதே போல் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் உடனடியாக Liposomal Amphotericin B மருந்து தமிழகத்திற்கு தேவை படுகிறது.
எனவே தாங்கள் தமிழகத்திற்கு 18-45 வயதிற்கான கொரோனா தடுப்பூசியும், கருப்பு பூஞ்சை நோயிற்கான Liposomal Amphotericin B மருந்தை அதிக அளவிற்கு வழங்குமாறு கோரிக்கை வைக்கிறேன்.” என்று வானதி ஸ்ரீனிவாசன் அதில் குறிப்பிட்டிருந்தார்.
கர்மயோகினி சங்கமம்: கன்யாகுமரியில் 50,000 பெண்கள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு கர்மயோகினி சங்கமம் என்ற சிறப்பு நிகழ்வு இன்று (மார்ச் 2, ஞாயிற்றுக்கிழமை) கன்யாகுமரியில்...
1990 ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் காடையர்களால் நாளுக்கு நாள் மட்டக்களப்பு அம்பாறை வாழ் தமிழ் சமூகங்களுக்கு எதிரான வன்முறைகள் கொலைகள் என்று அதிகரித்து கொண்டே இருந்தது அந்த...
இஸ்ரோ தலைவராக நியமனம் – யார் இந்த வி.நாராயணன்? இந்தியா விண்வெளி ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் முக்கிய சாதனைகளை தொடர்ச்சியாக செய்து வருவதாக பல உலக நாடுகளால்...
பாரத சுதந்திர வரலாறு இந்திய சுதந்திரப் போராட்டம் மிகவும் நீண்ட காலம் நடந்தது. இது மூன்று முக்கிய கட்டங்களாக வகுக்கப்படுகிறது: முதல் கட்டம்: தொடக்கப் போராட்டங்கள் (1857...
பாரதி கலைக் குழுவினர் நடத்தும் மாபெரும் நகைச்சுவை பட்டிமன்றம் தலைப்பு:"வளரும் பாரதத்தை மலரவைப்பது ஆண்களா...? பெண்களா...?" இந்த தலைப்பு வழியாக, சமூகத்தின் இரு முக்கிய தூண்களாகிய ஆண்களும்...
பெண்கள் இரண்டு வேளை குளிக்க வேண்டாம் எனும் நம்பிக்கை சில பழமையான சமூக வழக்கவழக்கங்களில் இருந்து வந்திருக்கலாம். இது முழுக்க தொன்மவியல், பாரம்பரிய நெறிமுறைகள் மற்றும் பழங்கால...