மக்கள் பிரச்சனையை உடனடியாக தீர்த்து வைக்கும் MLA எம்.ஆர். காந்தி… சாதனை…! Who will Solve the Problem of the people immediately MLA M.R.Gandhi achievements …!
நாகர்கோயில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி தொடர்ந்து அந்த தொகுதியில் உள்ள பிரச்சனை, புயல் சேதங்கள், கோயில் தீ விபத்து ஆகிய பல விஷயங்களில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு மக்களுக்காக தனது பணியை தவறாமல் செய்து கொண்டு வருகிறார். தன்னுடைய வயதையும் பொருட்படுத்தாமல், காலில் செருப்பு கூட அணியாமல் அந்த தொகுதிக்காக செயல்பட்டு வருகிறார்.
நேற்று தம்மத்துக்கோணம் குருகுலம் சாலை சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
அப்பகுதியை நேரில் பார்வையிட்ட பின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அவர் கூறியது போல் இன்று அந்த சாலை சீரமைப்பு பணி நடந்து கொண்டு இருக்கிறது.
அதே போல் இன்று புத்தேரி நெடுங்குளம் ஷட்டர் பழுதடைந்த நிலையில் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து இன்று அதை நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க படும் என்று கூறினார்.
அதனை தொடர்ந்து இன்று முருங்கவிளை ஊரில் இயங்கி வரும் யூனிக் வாரியர்ஸ் அறக்கட்டளை சார்பாக காலை ராஜாக்கமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு ஜெனரேட்டர் ஒன்றை எம்.ஆர். காந்தி வழங்கினார்.
சட்டமன்ற உறுப்பினர் என்றாலே சொகுசு கார், ஆடம்பர வாழ்க்கை, பணம் சம்பாதிக்கும் தன்மை இவ்வாறு பெரும்பாலானோர் இருப்பவர்கள் மத்தியில் மிகவும் எளிமையாக, மக்களுக்கு பணியாற்றி, மக்கள் பிரச்சனையை உடனடியாக தீர்த்து வைக்கும் எம்.ஆர். காந்தி இந்த கால இளைஞர்களுக்கும், வருங்கால அரசியல் வாதிகளுக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார்.
1990 ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் காடையர்களால் நாளுக்கு நாள் மட்டக்களப்பு அம்பாறை வாழ் தமிழ் சமூகங்களுக்கு எதிரான வன்முறைகள் கொலைகள் என்று அதிகரித்து கொண்டே இருந்தது அந்த...
இஸ்ரோ தலைவராக நியமனம் – யார் இந்த வி.நாராயணன்? இந்தியா விண்வெளி ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் முக்கிய சாதனைகளை தொடர்ச்சியாக செய்து வருவதாக பல உலக நாடுகளால்...
பாரத சுதந்திர வரலாறு இந்திய சுதந்திரப் போராட்டம் மிகவும் நீண்ட காலம் நடந்தது. இது மூன்று முக்கிய கட்டங்களாக வகுக்கப்படுகிறது: முதல் கட்டம்: தொடக்கப் போராட்டங்கள் (1857...
பாரதி கலைக் குழுவினர் நடத்தும் மாபெரும் நகைச்சுவை பட்டிமன்றம் தலைப்பு:"வளரும் பாரதத்தை மலரவைப்பது ஆண்களா...? பெண்களா...?" இந்த தலைப்பு வழியாக, சமூகத்தின் இரு முக்கிய தூண்களாகிய ஆண்களும்...
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு: கோவில் நிதி மூலம் நடத்தப்படும் கல்லூரிகள் மற்றும் பணி நியமனங்கள் இந்த வழக்கு, மத அடிப்படையில் பணி நியமனங்களை சட்டரீதியாக உணர்ந்து தீர்மானிக்க...
மதுரை ஜில்லா உசிலம்பட்டி தாலுகா நல்லுதேவன்பட்டியிலிருந்து ராசுத்தேவர் மகன் விருமாண்டி அவர்களின் கடிதம்: கஞ்சா வியாபாரம் மற்றும் கல்வி ஊழல் சம்பந்தமான விளக்கம் 28.10.2024 அன்று, மதுரை...