திருவண்ணாமலையில், தொடர்ந்து எட்டாவது மாதமாக, பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையிலுள்ள, மலையை சிவனாக பாவித்து, பவுர்ணமிதோறும் கிரிவலம் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்கள், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசிப்பர். கொரோனாவால், கடந்த மார்ச் மாதத்தில் இருந்து, கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த அக்., 1ல், புரட்டாசி மாத பவுர்ணமி தடை விதித்த நிலையில், வரும், 30ல், ஐப்பசி மாத பவுர்ணமி வருகிறது. பவுர்ணமி திதி, 30ல், மாலை, 6:45 மணிக்கு தொடங்கி, 31ல், இரவு, 8:49 மணி வரை உள்ளது. இந்நிலையில், தொடர்ந்து எட்டாவது மாதமாக, ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலத்துக்கு, மாவட்ட நிர்வாகம், தடை விதித்துள்ளது. பவுர்ணமி நாளில் கோவில் தரிசனத்துக்கு, பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். வரும், 30ல், அன்னாபிஷேகத்தை முன்னிட்டு, அன்று மாலை, 3:00 முதல், 6:00 மணி வரை, தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதியில்லை. அருணாசலேஸ்வரர் கோவிலில், நவ., 20ல், கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கி, தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கும். விழாவில், நவ.,29ல், மகாதீபம் ஏற்றப்படும். இதற்கு பக்தர்கள் அனுமதிக்கப் படுவார்களா, கார்த்திகை மாத பவுர்ணமி கிரிவலத்துக்கு அனுமதி கிடைக்குமா என, பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
மும்மொழிக் கொள்கை போராட்டம் – ஒரு வரலாற்றுப் பார்வை மொழி என்பது ஒரு சமூகத்தின் அடையாளமே மட்டுமல்ல; அது ஒரு சமூகத்தின் கலாசாரம், வரலாறு, பண்பாடு, உணர்வுகள்...
ஸ்ரீ ராமநவமி 2025 – வழிபாட்டு முறைகள், சிறப்பு உணவுகள் மற்றும் மந்திர ஜபம் ஸ்ரீ ராமநவமி என்பது ஹிந்து சமயத்தில் மிக முக்கியமான பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது....
நித்தியானந்தா இன்று அதிகாலையில் யூடியூப் நேரலை மூலம் தனது ஆதரவாளர்களுடன் உரையாடினார். இந்த நேரலை, சமீப காலமாக அவரைப் பற்றிய பல்வேறு செய்திகள் பரவி வந்த சூழ்நிலையில்...
கர்மயோகினி சங்கமம்: கன்யாகுமரியில் 50,000 பெண்கள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு கர்மயோகினி சங்கமம் என்ற சிறப்பு நிகழ்வு இன்று (மார்ச் 2, ஞாயிற்றுக்கிழமை) கன்யாகுமரியில்...
பண்டைய காலத்தில் நிடத நாட்டின் நீதியமைந்த மன்னனாக நளன் இருந்தான். அவரது பெருந்தன்மை, வீரத்தன்மை, அறிவு, அறிமுகமான கட்டுப்பாடு ஆகியவற்றால் நாட்டின் மக்கள் அவரை அன்புடன் கொண்டாடினார்கள்....