திருவண்ணாமலையில், தொடர்ந்து எட்டாவது மாதமாக, பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையிலுள்ள, மலையை சிவனாக பாவித்து, பவுர்ணமிதோறும் கிரிவலம் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்கள், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசிப்பர். கொரோனாவால், கடந்த மார்ச் மாதத்தில் இருந்து, கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த அக்., 1ல், புரட்டாசி மாத பவுர்ணமி தடை விதித்த நிலையில், வரும், 30ல், ஐப்பசி மாத பவுர்ணமி வருகிறது. பவுர்ணமி திதி, 30ல், மாலை, 6:45 மணிக்கு தொடங்கி, 31ல், இரவு, 8:49 மணி வரை உள்ளது. இந்நிலையில், தொடர்ந்து எட்டாவது மாதமாக, ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலத்துக்கு, மாவட்ட நிர்வாகம், தடை விதித்துள்ளது. பவுர்ணமி நாளில் கோவில் தரிசனத்துக்கு, பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். வரும், 30ல், அன்னாபிஷேகத்தை முன்னிட்டு, அன்று மாலை, 3:00 முதல், 6:00 மணி வரை, தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதியில்லை. அருணாசலேஸ்வரர் கோவிலில், நவ., 20ல், கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கி, தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கும். விழாவில், நவ.,29ல், மகாதீபம் ஏற்றப்படும். இதற்கு பக்தர்கள் அனுமதிக்கப் படுவார்களா, கார்த்திகை மாத பவுர்ணமி கிரிவலத்துக்கு அனுமதி கிடைக்குமா என, பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
அன்னிய மோகத்தால் சீரழியும் ஹிந்து குடும்ப அமைப்பும், அதை மீட்கும் வழியும் அறிமுகம் இன்றைய சமூக அமைப்பு மாறிவரும் உலக அரசியல், பொருளாதார மற்றும் கலாசார தாக்கங்களால்...
அன்னிய மோகத்தால் சீரழியும் ஹிந்து குடும்ப அமைப்பும், அதை மீட்கும் வழியும் அறிமுகம்: இன்றைய உலகம் வேகமாக மாறி வருகிறது. மனிதன் வாழ்வில் அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன்...
திருவாங்கூர் சமூக வரலாறு மற்றும் பெண்கள் மீதான அடக்குமுறை: விரிவான ஆய்வு பெருமைமிகு திருவாங்கூர் மண்டலம்:திருவாங்கூர் மண்டலம் என்பது 18ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதி...
பாரத சுதந்திர வரலாறு இந்திய சுதந்திரப் போராட்டம் மிகவும் நீண்ட காலம் நடந்தது. இது மூன்று முக்கிய கட்டங்களாக வகுக்கப்படுகிறது: முதல் கட்டம்: தொடக்கப் போராட்டங்கள் (1857...
திருவிடைக்கோடு மகாதேவர் கோவில் மிகச் சிறப்பாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தின் பழம்பெரும் சிவாலயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆலயத்தின் அமைப்பு சோழர் மற்றும் பல்லவர் கால கட்டமைப்புகளை பிரதிபலிக்கிறது....
2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வெற்றி மற்றும் சர்வதேச பாராட்டுகள் 2024 ஆம் ஆண்டு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு புதிய வரலாறு எழுதப்பட்டது. கடந்த...