ஒரு மாதத்தில் இரண்டு முறை வரும் முழு நிலவை நீல நிலவு என அழைக்கின்றனர். 30 மாதங்களுக்கு ஒரு முறை நடக்கும் இந்நிகழ்வு இம்மாதம் 31-ம் தேதி நடக்கும்.
பூமியை சுற்றி வரும் நிலவு, மாதத்தில் ஒரு முறை மட்டுமே முழுவதுமாக வானில் காட்சி தரும். அதாவது ஆண்டுக்கு 12 முறையும், பருவத்திற்கு 3 முறையும் தோன்றும். இது அரிதாக மாதத்தில் இரண்டு முறை அல்லது பருவத்திற்கு 4 முறை தோன்றும். இதனை நீல நிலவு என ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். ஆனால் நிலவு எப்போதும் போல வெளிர் சாம்பல் மற்றும் வெள்ளை நிறத்திலேயே இருக்கும். எரிமலை வெடிப்பு, காட்டு தீ, தூசி புயல் போன்றவற்றின் போது மட்டும் அரிதாக நிலவு நீல நிறமாக காட்சி தரும்.
ஆங்கிலத்தில் அரிதாக நடக்கும் நிகழ்வை “ஒன்ஸ் இன் ஏ ப்ளூமூன்” என்பார்கள். மாதத்திற்கு இரண்டு முறை தோன்றும் நிலவுக்கும் இவ்வார்த்தையை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இந்த மாதத்தில் முதல் முழு நிலவு அக்., முதல் தேதியில் தோன்றியது. இந்த நிலையில் 31-ம் தேதியும் அரிதான இரண்டாவது முழு நிலவு தோன்றுகிறது. இரவு 8.19 மணிக்கு இந்நிலவு உதயமாகும். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே இது போன்று ஏற்படும். கடைசியாக மார்ச் 2018-ல் நடந்தது என நாசா கூறியுள்ளது.
கர்மயோகினி சங்கமம்: கன்யாகுமரியில் 50,000 பெண்கள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு கர்மயோகினி சங்கமம் என்ற சிறப்பு நிகழ்வு இன்று (மார்ச் 2, ஞாயிற்றுக்கிழமை) கன்யாகுமரியில்...
பண்டைய காலத்தில் நிடத நாட்டின் நீதியமைந்த மன்னனாக நளன் இருந்தான். அவரது பெருந்தன்மை, வீரத்தன்மை, அறிவு, அறிமுகமான கட்டுப்பாடு ஆகியவற்றால் நாட்டின் மக்கள் அவரை அன்புடன் கொண்டாடினார்கள்....
18 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை துவாரகா கடலில் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சியைத் தொடங்கியுள்ளது. கடலுக்கு அடியில் மூழ்கியுள்ள கிருஷ்ணரின் கர்ம பூமியைக் கண்டறியும் முயற்சியின்...
ஸநாதனம் – ஒரு சவால்… எழுதியவர் சுவாமி சைதன்யானந்தர் (1) ஸநாதனம் - ஒரு சவால் தொடர்ச்சி... அறிவிலிகள் கூறும் ஸநாதனம் ஆனால், அதிமேதாவிகள் எனத் தங்களைத்...
முருகப்பெருமானின் பக்தி வழிபாட்டில் முக்கியமான தைப்பூசத் திருவிழா தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். தமிழ் மாதமான "தை"-யில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி...
1990 ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் காடையர்களால் நாளுக்கு நாள் மட்டக்களப்பு அம்பாறை வாழ் தமிழ் சமூகங்களுக்கு எதிரான வன்முறைகள் கொலைகள் என்று அதிகரித்து கொண்டே இருந்தது அந்த...