திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் லட்ச குங்குமார்ச்சனை சேவையை இணையவழியில் நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய் துள்ளது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரும் 11-ம் தேதி முதல் கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. இதையொட்டி வரும் 10-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை பக்தர்கள் இன்றி லட்ச குங்குமார்ச்சனை நடத்தப்பட உள்ளது.
இதில் பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே இணையவழியில் பங்கேற்கும் விதமாக திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய் துள்ளது. இதற்கான டிக்கெட்களை நேற்று காலை 10 மணி முதல் இணையவழியில் பக்தர்கள் பெற்றனர்.
இந்த டிக்கெட்களை பெற்ற பக்தர்கள் 10-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை கோயிலில் நடைபெறும் லட்ச குங்குமார்ச்சனையில் பங்கேற்கலாம்.
மேலும் தேவஸ்தான தொலைக்காட்சியான எஸ்விபிசி சேனல் மூலமாகவும் இந்நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இந்த சேவையில் டிக்கெட் பெற்று பங்கேற்கும் பக்தர்களின் வீடுகளுக்கு ரவிக்கை, குங்குமம், அட்சதை, 2 மஞ்சள் கயிறு, கல்கண்டு பிரசாதம் ஆகிய பிரசாதங்கள் அஞ்சல் மூலம் அனுப்பப்படும்.
எனவே பக்தர்கள் www.tirupatibalaji.ap.gov.in என்கிற இணையதளத்தில் பங்கேற்பவர்களின் பெயர், வயது, பாலினம், அஞ்சல் எண், செல்போன் எண், பிரசாதங்களை அஞ்சல் மூலம் அனுப்புவதற்கான முகவரி உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
டிக்கெட்டுக்கான தொகையை எந்த வங்கியின் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலமும் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கர்மயோகினி சங்கமம்: கன்யாகுமரியில் 50,000 பெண்கள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு கர்மயோகினி சங்கமம் என்ற சிறப்பு நிகழ்வு இன்று (மார்ச் 2, ஞாயிற்றுக்கிழமை) கன்யாகுமரியில்...
பண்டைய காலத்தில் நிடத நாட்டின் நீதியமைந்த மன்னனாக நளன் இருந்தான். அவரது பெருந்தன்மை, வீரத்தன்மை, அறிவு, அறிமுகமான கட்டுப்பாடு ஆகியவற்றால் நாட்டின் மக்கள் அவரை அன்புடன் கொண்டாடினார்கள்....
18 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை துவாரகா கடலில் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சியைத் தொடங்கியுள்ளது. கடலுக்கு அடியில் மூழ்கியுள்ள கிருஷ்ணரின் கர்ம பூமியைக் கண்டறியும் முயற்சியின்...
ஸநாதனம் – ஒரு சவால்… எழுதியவர் சுவாமி சைதன்யானந்தர் (1) ஸநாதனம் - ஒரு சவால் தொடர்ச்சி... அறிவிலிகள் கூறும் ஸநாதனம் ஆனால், அதிமேதாவிகள் எனத் தங்களைத்...
முருகப்பெருமானின் பக்தி வழிபாட்டில் முக்கியமான தைப்பூசத் திருவிழா தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். தமிழ் மாதமான "தை"-யில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி...
1990 ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் காடையர்களால் நாளுக்கு நாள் மட்டக்களப்பு அம்பாறை வாழ் தமிழ் சமூகங்களுக்கு எதிரான வன்முறைகள் கொலைகள் என்று அதிகரித்து கொண்டே இருந்தது அந்த...