சீரடி சாய்பாபா கோயிலில் இன்று முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சீரடி சாய்பாபா திருக்கோவிலில் கொரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. காரணம் இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்தது. இந்த சூழ்நிலையில் கோவிலில் பக்தர்களை அனுமதிக்க கூடாது என மத்திய அரசு அறிவித்ததின் எதிரொலியாக கடந்த ஆறு மாத காலமாக கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டு கிடந்தன . இதைத்தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகளின் அடிப்படையில் பல மாநிலங்களில் கோவில்கள் மீண்டும் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது.
இருப்பினும் சீரடி சாய்பாபா கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் இன்று முதல் பாபாவை தரிசனம் செய்யலாம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது
இருப்பினும் இணையதளத்தில் முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதே போல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின்படி 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு கோவிலில் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்றும் கூறியுள்ளது.
முருகப்பெருமானின் பக்தி வழிபாட்டில் முக்கியமான தைப்பூசத் திருவிழா தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். தமிழ் மாதமான "தை"-யில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி...
1990 ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் காடையர்களால் நாளுக்கு நாள் மட்டக்களப்பு அம்பாறை வாழ் தமிழ் சமூகங்களுக்கு எதிரான வன்முறைகள் கொலைகள் என்று அதிகரித்து கொண்டே இருந்தது அந்த...
128 வயது பழக்கப்பட்டு, கும்பமேளாக்களில் பங்கேற்று சாதனை புரிந்துள்ள சுவாமி சிவானந்த பாபாவின் வாழ்க்கை பலர் நம்ப முடியாத அதிசயங்களின் தொகுப்பாக உள்ளது. அவர் வாழ்க்கை முறையும்...
அன்னிய மோகத்தால் சீரழியும் ஹிந்து குடும்ப அமைப்பும், அதை மீட்கும் வழியும் அறிமுகம் இன்றைய சமூக அமைப்பு மாறிவரும் உலக அரசியல், பொருளாதார மற்றும் கலாசார தாக்கங்களால்...