திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவில் இன்று(நவ.,20) மாலை 4: 30 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சி கடற்கரையில் நடந்தது.
திருச்செந்தூர் சுப்பரிமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழா 15ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது. இன்று அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடந்தது. காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையை தொடர்ந்து, பூர்ணாஹூதி தீபாராதனை, சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.
விழாவில், இன்று மாலை 4:30 மணிக்கு சூரசம்ஹாரம் நடந்தது. கடற்கரையில் வழக்கமான இடத்திற்கு பதில், கோயிலுக்கு அருகிலேயே கடற்கரையில் நிகழ்ச்சியை நடத்தப்பட்டது. உற்சவர் ஜெயந்திநாதனர் சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளிய நிலயில் சூரனை வதம் செய்யும் வேல், பூஜைகள் செய்யப்பட்டு சஷ்டி மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
தொடர்ந்து, யானை முகம் கொண்ட தாரகாசூரன், சிங்கமுகசூரன் ஆகியோரை வதம் செய்த பின், முருகப்பெருமான், இறுதியாக சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. சூரசம்ஹாரம் நிறைவு பெற்ற பின், வள்ளி, தெய்வானையுடன், முருகப்பெருமான் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கொரோனா காரணமாக சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை.
கர்மயோகினி சங்கமம்: கன்யாகுமரியில் 50,000 பெண்கள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு கர்மயோகினி சங்கமம் என்ற சிறப்பு நிகழ்வு இன்று (மார்ச் 2, ஞாயிற்றுக்கிழமை) கன்யாகுமரியில்...
பண்டைய காலத்தில் நிடத நாட்டின் நீதியமைந்த மன்னனாக நளன் இருந்தான். அவரது பெருந்தன்மை, வீரத்தன்மை, அறிவு, அறிமுகமான கட்டுப்பாடு ஆகியவற்றால் நாட்டின் மக்கள் அவரை அன்புடன் கொண்டாடினார்கள்....
18 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை துவாரகா கடலில் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சியைத் தொடங்கியுள்ளது. கடலுக்கு அடியில் மூழ்கியுள்ள கிருஷ்ணரின் கர்ம பூமியைக் கண்டறியும் முயற்சியின்...
ஸநாதனம் – ஒரு சவால்… எழுதியவர் சுவாமி சைதன்யானந்தர் (1) ஸநாதனம் - ஒரு சவால் தொடர்ச்சி... அறிவிலிகள் கூறும் ஸநாதனம் ஆனால், அதிமேதாவிகள் எனத் தங்களைத்...
முருகப்பெருமானின் பக்தி வழிபாட்டில் முக்கியமான தைப்பூசத் திருவிழா தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். தமிழ் மாதமான "தை"-யில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி...
1990 ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் காடையர்களால் நாளுக்கு நாள் மட்டக்களப்பு அம்பாறை வாழ் தமிழ் சமூகங்களுக்கு எதிரான வன்முறைகள் கொலைகள் என்று அதிகரித்து கொண்டே இருந்தது அந்த...