திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு கொண்டுச் செல்லப்பட்டது. 2,668 அடி உயர மலை மீது நாளை மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதனால் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மகா தீப கொப்பரையை தோளில் சுமந்து இன்று காலை எடுத்துச் சென்றனர். திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற மகாதீப பெருவிழா நாளை நடைபெற உள்ளது.
அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி எதிரில் பரணி தீபம் நாளை அதிகாலை 4 மணிக்கு ஏற்றப்படும். அதனை தொடர்ந்து, மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. தீபம் ஏற்றுவதற்கான மகா தீப கொப்பரை இன்று அதிகாலை மலை உச்சிக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்போது அதனை கோவில் ஊழியர்கள் எடுத்து சென்றனர். இதற்காக 3,500 கிலோ நெய் கொள்முதல் செய்யப்பட்டு தயார் நிலையில் வைத்துள்ளனர்.
கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக பக்தர்களுக்கு இந்த வருடம் அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே 28, 29-ம் தேதிகளில் திருவண்ணாமலை நகருக்குள் வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் நகரின் முக்கிய சாலைகள் மற்றும் அணுகுசாலைகளில் 15 இடங்களில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டு பக்தர்கள் தடுத்து நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கோயிலுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம், நகர எல்லையில் கூட்டம் சேராமல் தவிர்க்க கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அன்னிய மோகத்தால் சீரழியும் ஹிந்து குடும்ப அமைப்பும், அதை மீட்கும் வழியும் அறிமுகம் இன்றைய சமூக அமைப்பு மாறிவரும் உலக அரசியல், பொருளாதார மற்றும் கலாசார தாக்கங்களால்...
அன்னிய மோகத்தால் சீரழியும் ஹிந்து குடும்ப அமைப்பும், அதை மீட்கும் வழியும் அறிமுகம்: இன்றைய உலகம் வேகமாக மாறி வருகிறது. மனிதன் வாழ்வில் அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன்...
திருவாங்கூர் சமூக வரலாறு மற்றும் பெண்கள் மீதான அடக்குமுறை: விரிவான ஆய்வு பெருமைமிகு திருவாங்கூர் மண்டலம்:திருவாங்கூர் மண்டலம் என்பது 18ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதி...
பாரத சுதந்திர வரலாறு இந்திய சுதந்திரப் போராட்டம் மிகவும் நீண்ட காலம் நடந்தது. இது மூன்று முக்கிய கட்டங்களாக வகுக்கப்படுகிறது: முதல் கட்டம்: தொடக்கப் போராட்டங்கள் (1857...
திருவிடைக்கோடு மகாதேவர் கோவில் மிகச் சிறப்பாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தின் பழம்பெரும் சிவாலயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆலயத்தின் அமைப்பு சோழர் மற்றும் பல்லவர் கால கட்டமைப்புகளை பிரதிபலிக்கிறது....
2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வெற்றி மற்றும் சர்வதேச பாராட்டுகள் 2024 ஆம் ஆண்டு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு புதிய வரலாறு எழுதப்பட்டது. கடந்த...