அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, ஆகஸ்ட், 3 அல்லது, 5ம் தேதியன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க, பிரதமர், மோடிக்கு, ராம ஜன்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.
உத்தர பிரதேசத்தில், உள்ள அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்காக, ராம ஜன்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்நிலையில், அறக்கட்டளை தலைவர், மஹந்த் நிருத்யா கோபால், அயோத்தியில் நேற்று கூறியதாவது:அயோத்தியில், பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை நடந்த, ஆகஸ்ட் 3 மற்றும் 5 தேதிகளை தேர்வு செய்துள்ளோம். இரண்டுமே சிறந்த நாட்களாக உள்ளன.
துவக்கவிழாவில் பங்கேற்க, பிரதமர், மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளோம். பிரதமரின் வசதியை பொருத்து, 3 அல்லது, 5ம் தேதியில் அடிக்கல் நாட்டப்படும்.கோவில் கட்டுமான பணி துவக்க விழாவை, ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையில் நடத்த விரும்பிவில்லை.நிகழ்ச்சிக்கு, பிரதமர் நேரிடையாக வருவார் என, எதிர்பார்க்கிறோம். விழாவில் பங்கேற்க, ஆர்.எஸ்.எஸ்., தலைவர், மோகன் பாகவத்துக்கும், அழைப்பு விடுக்க முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
மும்மொழிக் கொள்கை போராட்டம் – ஒரு வரலாற்றுப் பார்வை மொழி என்பது ஒரு சமூகத்தின் அடையாளமே மட்டுமல்ல; அது ஒரு சமூகத்தின் கலாசாரம், வரலாறு, பண்பாடு, உணர்வுகள்...
ஸ்ரீ ராமநவமி 2025 – வழிபாட்டு முறைகள், சிறப்பு உணவுகள் மற்றும் மந்திர ஜபம் ஸ்ரீ ராமநவமி என்பது ஹிந்து சமயத்தில் மிக முக்கியமான பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது....
நித்தியானந்தா இன்று அதிகாலையில் யூடியூப் நேரலை மூலம் தனது ஆதரவாளர்களுடன் உரையாடினார். இந்த நேரலை, சமீப காலமாக அவரைப் பற்றிய பல்வேறு செய்திகள் பரவி வந்த சூழ்நிலையில்...
கர்மயோகினி சங்கமம்: கன்யாகுமரியில் 50,000 பெண்கள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு கர்மயோகினி சங்கமம் என்ற சிறப்பு நிகழ்வு இன்று (மார்ச் 2, ஞாயிற்றுக்கிழமை) கன்யாகுமரியில்...
பண்டைய காலத்தில் நிடத நாட்டின் நீதியமைந்த மன்னனாக நளன் இருந்தான். அவரது பெருந்தன்மை, வீரத்தன்மை, அறிவு, அறிமுகமான கட்டுப்பாடு ஆகியவற்றால் நாட்டின் மக்கள் அவரை அன்புடன் கொண்டாடினார்கள்....