திருப்பதியில் கொரோனா வேகமாக பரவி வருவதையடுத்து, இன்று(ஜூலை 21) முதல் ஆக.,5ம் தேதி வரை 15 நாள் முழு ஊரடங்கு பிறப்பித்து சித்தூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
திருமலை ஏழுமலையான் கோவிலில், மடப்பள்ளி ஊழியர்கள், அர்ச்சகர்கள், தேவஸ்தான ஊழியர்கள், ஜீயர்கள் என, 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. திருமலை ஏழுமலையான் கோவிலில் பணிபுரிந்த, முன்னாள் தலைமை அர்ச்சகர் கொரோனா தொற்றால் நேற்று உயிரிழந்தார். இது, தேவஸ்தானத்தில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பாக பலியானது.
இந்நிலையில் திருப்பதியில் முழு ஊரடங்கு பிறப்பித்து, சித்தூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சித்துார் மாவட்ட கலெக்டர் நாராயண பரத் குப்தா கூறியதாவது: சித்தூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உயிரிழப்பும் கூடிக் கொண்டே செல்கிறது. இதை கட்டுப்படுத்த, திருப்பதியில் இன்று முதல் ஆக., 5ம் தேதி வரை, முழு ஊரடங்கு அறிவிக்கப்படுகிறது. காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை மட்டுமே உணவங்கள், கடைகள் திறந்திருக்கும். அதன் பின் பால், மெடிக்கல் ஷாப்கள் மட்டுமே திறக்க அனுமதி உண்டு. திருப்பதியில் வசிப்பவர்கள், 11 மணிக்கு பின் வெளியில் நடமாட அனுமதியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், தேவஸ்தான அறங்காவலர் குழு, முன்னாள் உறுப்பினர் பானுபிரகாஷ் ரெட்டி, ஆந்திர முதல்வர் ஜெகனுக்கு நேற்று ஒரு கடிதம் எழுதினார். அதில், ஆந்திர அரசு, திருப்பதி ஏழுமலையான் தரிசன அனுமதியை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்.
மும்மொழிக் கொள்கை போராட்டம் – ஒரு வரலாற்றுப் பார்வை மொழி என்பது ஒரு சமூகத்தின் அடையாளமே மட்டுமல்ல; அது ஒரு சமூகத்தின் கலாசாரம், வரலாறு, பண்பாடு, உணர்வுகள்...
ஸ்ரீ ராமநவமி 2025 – வழிபாட்டு முறைகள், சிறப்பு உணவுகள் மற்றும் மந்திர ஜபம் ஸ்ரீ ராமநவமி என்பது ஹிந்து சமயத்தில் மிக முக்கியமான பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது....
நித்தியானந்தா இன்று அதிகாலையில் யூடியூப் நேரலை மூலம் தனது ஆதரவாளர்களுடன் உரையாடினார். இந்த நேரலை, சமீப காலமாக அவரைப் பற்றிய பல்வேறு செய்திகள் பரவி வந்த சூழ்நிலையில்...
கர்மயோகினி சங்கமம்: கன்யாகுமரியில் 50,000 பெண்கள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு கர்மயோகினி சங்கமம் என்ற சிறப்பு நிகழ்வு இன்று (மார்ச் 2, ஞாயிற்றுக்கிழமை) கன்யாகுமரியில்...
பண்டைய காலத்தில் நிடத நாட்டின் நீதியமைந்த மன்னனாக நளன் இருந்தான். அவரது பெருந்தன்மை, வீரத்தன்மை, அறிவு, அறிமுகமான கட்டுப்பாடு ஆகியவற்றால் நாட்டின் மக்கள் அவரை அன்புடன் கொண்டாடினார்கள்....