அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கு உலகம் முழுதும் உள்ள இந்தியர்கள் நிதி வழங்க அனுமதியளிக்க வேண்டும்’ என பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க வாழ் இந்தியர் நல ஆர்வலர் பிரேம் பண்டாரி கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க வாழ் இந்தியர் நல ஆர்வலரும் ஜெய்ப்பூர் புட் யு.எஸ்.ஏ. அமைப்பின் தலைவருமான பிரேம் பண்டாரி நியூயார்க்கில் கூறியதாவது:
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கு நிதி வழங்க வெளிநாடுகளில் வசிக்கும் 3.2 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் மிகவும் ஆர்வமாக உள்ளனர். அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில் ஹிந்துகளின் கலாசாரம் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது.அதனால் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் ராமர் கோவிலுக்கு தாங்கள் விரும்பும் நிதியை அளிக்க அனுமதிக்க வேண்டும்.
இதற்கான எளிய வழிமுறை ஒன்றையும் ஏற்பாடு செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக்கொள்கிறேன். இந்த நிதி அயோத்தி கோயிலை கட்டும் ராமஜன்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைக்கு நேரடியாக செல்ல வேண்டும். நான் ராமரின் தீவிர பக்தன். அயோத்தியில் கட்டப்பட உள்ள பிரமாண்ட ராமர் கோயிலுக்கு நிதி வழங்க தயாராகஉள்ளேன்.கொரோனா வைரசை தடுக்க பிரதமர் மோடி ‘பி.எம். கேர்ஸ்’ நிதியத்தை துவக்கிய மறுநாளே ஜெய்ப்பூர் புட் யு.எஸ்.ஏ. அமைப்பு சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
அன்னிய மோகத்தால் சீரழியும் ஹிந்து குடும்ப அமைப்பும், அதை மீட்கும் வழியும் அறிமுகம் இன்றைய சமூக அமைப்பு மாறிவரும் உலக அரசியல், பொருளாதார மற்றும் கலாசார தாக்கங்களால்...
அன்னிய மோகத்தால் சீரழியும் ஹிந்து குடும்ப அமைப்பும், அதை மீட்கும் வழியும் அறிமுகம்: இன்றைய உலகம் வேகமாக மாறி வருகிறது. மனிதன் வாழ்வில் அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன்...
திருவாங்கூர் சமூக வரலாறு மற்றும் பெண்கள் மீதான அடக்குமுறை: விரிவான ஆய்வு பெருமைமிகு திருவாங்கூர் மண்டலம்:திருவாங்கூர் மண்டலம் என்பது 18ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதி...
பாரத சுதந்திர வரலாறு இந்திய சுதந்திரப் போராட்டம் மிகவும் நீண்ட காலம் நடந்தது. இது மூன்று முக்கிய கட்டங்களாக வகுக்கப்படுகிறது: முதல் கட்டம்: தொடக்கப் போராட்டங்கள் (1857...
திருவிடைக்கோடு மகாதேவர் கோவில் மிகச் சிறப்பாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தின் பழம்பெரும் சிவாலயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆலயத்தின் அமைப்பு சோழர் மற்றும் பல்லவர் கால கட்டமைப்புகளை பிரதிபலிக்கிறது....
2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வெற்றி மற்றும் சர்வதேச பாராட்டுகள் 2024 ஆம் ஆண்டு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு புதிய வரலாறு எழுதப்பட்டது. கடந்த...