”பொதுமக்களுக்கு முக கவசத்தோடு கந்தர் சஷ்டி கவசத்தையும், முருக பக்தர்கள் வழங்க வேண்டும்,” என, காமாட்சிபுரம் ஆதினம் தெரிவித்தார்.கோவை, காமாட்சிபுரம் ஆதினம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் நிருபர்களிடம் கூறியதாவது:”இந்து தர்மம் காலத்தால் தொண்மையானது. அதில், முருக வழிபாடு மிக முக்கியமானது.
மலேசியா, இலங்கை, பர்மா மற்றும் மேலை நாடுகளில் பல கோவில்களில் முருகன் சிலைக்கு பதிலாக வேல்தான் வைத்து பூஜை செய்யப்படுகிறது. முருகனின் சிறப்பை பல அடியார்கள், புலவர்கள் பாடியுள்ளனர்.கந்த சஷ்டி கவசம் என்பது தேவராய சுவாமிகளால் அருளப்பட்டது. கவசம் என்பது உச்சிமுதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து உறுப்புகளையும் காக்க கடவுளை பிரார்த்திப்பதாகும்.
கந்தர் சஷ்டி கவசத்தை இழிவுபடுத்துவதை, காவடிக்குழு பக்தர்கள், இனி பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். அரசு இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் ஆக.,9ம் தேதி சஷ்டி அன்று முருக பக்தர்கள், காவடிக்குழுவினர் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசத்தோடு, கந்தர்சஷ்டி கவசத்தையும் வீடு வீடாக சென்று வழங்க வேண்டும்.அதேபோல், பங்குனி உத்திரம், தை பூசத்துக்கு திடும்பு இசை வைத்திருப்பவர்கள் சஷ்டி அன்றும் இசை வாசித்து முருகன் அருளால் தீயவர்களுக்கு நல்ல புத்தி வர பிரார்த்தனை செய்வோம்,” என்றார்.
அன்னிய மோகத்தால் சீரழியும் ஹிந்து குடும்ப அமைப்பும், அதை மீட்கும் வழியும் அறிமுகம் இன்றைய சமூக அமைப்பு மாறிவரும் உலக அரசியல், பொருளாதார மற்றும் கலாசார தாக்கங்களால்...
அன்னிய மோகத்தால் சீரழியும் ஹிந்து குடும்ப அமைப்பும், அதை மீட்கும் வழியும் அறிமுகம்: இன்றைய உலகம் வேகமாக மாறி வருகிறது. மனிதன் வாழ்வில் அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன்...
திருவாங்கூர் சமூக வரலாறு மற்றும் பெண்கள் மீதான அடக்குமுறை: விரிவான ஆய்வு பெருமைமிகு திருவாங்கூர் மண்டலம்:திருவாங்கூர் மண்டலம் என்பது 18ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதி...
பாரத சுதந்திர வரலாறு இந்திய சுதந்திரப் போராட்டம் மிகவும் நீண்ட காலம் நடந்தது. இது மூன்று முக்கிய கட்டங்களாக வகுக்கப்படுகிறது: முதல் கட்டம்: தொடக்கப் போராட்டங்கள் (1857...
திருவிடைக்கோடு மகாதேவர் கோவில் மிகச் சிறப்பாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தின் பழம்பெரும் சிவாலயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆலயத்தின் அமைப்பு சோழர் மற்றும் பல்லவர் கால கட்டமைப்புகளை பிரதிபலிக்கிறது....
2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வெற்றி மற்றும் சர்வதேச பாராட்டுகள் 2024 ஆம் ஆண்டு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு புதிய வரலாறு எழுதப்பட்டது. கடந்த...