அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை விழாவிற்கு ஒருசில நாட்களுக்கு முன்னதாக ராம ஜென்ம பூமி இயக்க வரலாறு புத்தகம் வெளியிடப்பட உள்ளது.
இது குறித்து ஆர்.எஸ்.எஸ். வி.எச்.பி இயக்க தலைவர்கள் கூறி இருப்பதாவது: அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமிபூஜை வரும் 5ம் தேதி துவங்க உள்ளது. அதற்கு முன்னதாக ஆக.,1 -ம் தேதி ராம ஜென்ம பூமி இயக்க வரலாறு புத்தகம் வெளியிடப்படுகிறது.
ராம ஜென்ம பூமி இயக்கத்தின் வரலாறு குறித்த புத்தகத்தை ஆர்.எஸ்.எஸ் ஐ.டி.,பிரிவின் தலைமை நிர்வாகியான அருண் ஆனந்த் மற்றும் சமூகவியலில் பட்டம் பெற்றுள்ள வினய் நல்வா ஆகியோர் எழுதி உள்ளனர். ராமர் பிறந்ததில் இருந்து ராமர் கோகயிலின் புனரமைப்பு வரை அயோத்தியின் முழுமையான வரலாற்றை கொண்ட முதல் புத்தகம் இது என கூறினர்.
புத்தகம் குறித்து அருண் ஆனந்த் கூறுகையில் கோயிலை நிர்மானிப்பதற்கான 500 ஆண்டுகால போராட்டங்களை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 1528 ம் ஆண்டுவரையில் அயோத்திக்கு வந்துள்ள வெளிநாட்டு பயணிகள் குறித்தும், 1528 ம் ஆண்டிற்கு பின்னர் ராமர் கோவில்இடிக்கப்பட்டது என்ற உண்மையை புத்தகத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என கூறினார்.
அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமிபூஜை வரும் 5ம் தேதி துவங்க உள்ளது. இந்தவிழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்மயோகினி சங்கமம்: கன்யாகுமரியில் 50,000 பெண்கள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு கர்மயோகினி சங்கமம் என்ற சிறப்பு நிகழ்வு இன்று (மார்ச் 2, ஞாயிற்றுக்கிழமை) கன்யாகுமரியில்...
பண்டைய காலத்தில் நிடத நாட்டின் நீதியமைந்த மன்னனாக நளன் இருந்தான். அவரது பெருந்தன்மை, வீரத்தன்மை, அறிவு, அறிமுகமான கட்டுப்பாடு ஆகியவற்றால் நாட்டின் மக்கள் அவரை அன்புடன் கொண்டாடினார்கள்....
18 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை துவாரகா கடலில் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சியைத் தொடங்கியுள்ளது. கடலுக்கு அடியில் மூழ்கியுள்ள கிருஷ்ணரின் கர்ம பூமியைக் கண்டறியும் முயற்சியின்...
ஸநாதனம் – ஒரு சவால்… எழுதியவர் சுவாமி சைதன்யானந்தர் (1) ஸநாதனம் - ஒரு சவால் தொடர்ச்சி... அறிவிலிகள் கூறும் ஸநாதனம் ஆனால், அதிமேதாவிகள் எனத் தங்களைத்...
முருகப்பெருமானின் பக்தி வழிபாட்டில் முக்கியமான தைப்பூசத் திருவிழா தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். தமிழ் மாதமான "தை"-யில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி...
1990 ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் காடையர்களால் நாளுக்கு நாள் மட்டக்களப்பு அம்பாறை வாழ் தமிழ் சமூகங்களுக்கு எதிரான வன்முறைகள் கொலைகள் என்று அதிகரித்து கொண்டே இருந்தது அந்த...