கந்த சஷ்டியை இழிவுபடுத்தி, கருப்பர் கூட்டம் எனும் யூ டியூப் அமைப்பு வெளியிட்ட வீடியோவுக்கு, தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சிவனடியார்கள், ஆதீனங்கள், மற்றும் இந்து மதத்தை சேர்ந்த பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தை தொடர்ந்து, கந்த சஷ்டி கவசத்தின் மீது, பக்தர்கள் கூடுதல் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இந்து மதம் சார்ந்த பல்வேறு ஆன்மீக அமைப்புகளும், கந்த சஷ்டி கவசம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. கந்த சஷ்டியை இழிவுபடுத்திய, கருப்பர் கூட்டம் அமைப்புக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், வெற்றிவேல் வீரவேல் என்ற வரிகளும் பிரபலமாயின. இதனிடைய, நடிகர் சிவாஜி கணேசன் நடித்து, 1967ல் வழிவந்த கந்தன் கருணை திரைப்படத்தில் இடம்பெற்ற வெற்றிவேல் வீரவேல், சுற்றி நின்ற பகைவர் தம்மை தோள் நடுங்க வைத்த எங்கள் சக்திவேல் எனும் பாடல், மொபைல் போன்களில் ரிங் டோனாக பயன்படுத்தப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது. 53 ஆண்டுக்கு முன் வெளியான திரைப்படத்தின் பாடல்கள், நீண்ட காலத்துக்குப் பின், மீண்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கருப்பர் கூட்டம் அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வெற்றிவேல் வீரவேல் ரிங் டோன், பல்வேறு தரப்பினராலும், வாட்ஸ் அப் மூலம் பகிரப்பட்டு வருகிறது.
கர்மயோகினி சங்கமம்: கன்யாகுமரியில் 50,000 பெண்கள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு கர்மயோகினி சங்கமம் என்ற சிறப்பு நிகழ்வு இன்று (மார்ச் 2, ஞாயிற்றுக்கிழமை) கன்யாகுமரியில்...
பண்டைய காலத்தில் நிடத நாட்டின் நீதியமைந்த மன்னனாக நளன் இருந்தான். அவரது பெருந்தன்மை, வீரத்தன்மை, அறிவு, அறிமுகமான கட்டுப்பாடு ஆகியவற்றால் நாட்டின் மக்கள் அவரை அன்புடன் கொண்டாடினார்கள்....
18 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை துவாரகா கடலில் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சியைத் தொடங்கியுள்ளது. கடலுக்கு அடியில் மூழ்கியுள்ள கிருஷ்ணரின் கர்ம பூமியைக் கண்டறியும் முயற்சியின்...
ஸநாதனம் – ஒரு சவால்… எழுதியவர் சுவாமி சைதன்யானந்தர் (1) ஸநாதனம் - ஒரு சவால் தொடர்ச்சி... அறிவிலிகள் கூறும் ஸநாதனம் ஆனால், அதிமேதாவிகள் எனத் தங்களைத்...
முருகப்பெருமானின் பக்தி வழிபாட்டில் முக்கியமான தைப்பூசத் திருவிழா தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். தமிழ் மாதமான "தை"-யில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி...
1990 ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் காடையர்களால் நாளுக்கு நாள் மட்டக்களப்பு அம்பாறை வாழ் தமிழ் சமூகங்களுக்கு எதிரான வன்முறைகள் கொலைகள் என்று அதிகரித்து கொண்டே இருந்தது அந்த...