அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக நடந்த போராட்டத்தில், தீவிரமாக ஈடுபட்டவர்களில், பா.ஜ., மூத்த தலைவர்கள், அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு பெரும் பங்கு உண்டு.
அயோத்தியில் கோவில் கட்ட வலியுறுத்தி, கடந்த, 1990ல், அத்வானி ரத யாத்திரை மேற்கொண்டார். இந்நிலையில், அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க, அயோத்தி பேராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என, அறக்கட்டளை தெரிவித்திருந்தது. பா.ஜ., மூத்த தலைவர் உமா பாரதி, கல்யாண் சிங் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.ஆனால், அத்வானி, ஜோஷிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என, தகவல் வெளியானது, இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அத்வானி, ஜோஷிக்கு, டெலிபோனில் அழைப்பு விடுக்கப்படும் என, அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
உ.பி., முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் கூறுகையில், ”அயோத்தியில், 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதில், எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அதற்கான விலையை, நான் ஏற்கனவே கொடுத்துவிட்டேன். அடிக்கல் நாட்டு விழாவில், நிச்சயம் பங்கேற்பேன்,” என்றார்.
மும்மொழிக் கொள்கை போராட்டம் – ஒரு வரலாற்றுப் பார்வை மொழி என்பது ஒரு சமூகத்தின் அடையாளமே மட்டுமல்ல; அது ஒரு சமூகத்தின் கலாசாரம், வரலாறு, பண்பாடு, உணர்வுகள்...
ஸ்ரீ ராமநவமி 2025 – வழிபாட்டு முறைகள், சிறப்பு உணவுகள் மற்றும் மந்திர ஜபம் ஸ்ரீ ராமநவமி என்பது ஹிந்து சமயத்தில் மிக முக்கியமான பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது....
நித்தியானந்தா இன்று அதிகாலையில் யூடியூப் நேரலை மூலம் தனது ஆதரவாளர்களுடன் உரையாடினார். இந்த நேரலை, சமீப காலமாக அவரைப் பற்றிய பல்வேறு செய்திகள் பரவி வந்த சூழ்நிலையில்...
கர்மயோகினி சங்கமம்: கன்யாகுமரியில் 50,000 பெண்கள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு கர்மயோகினி சங்கமம் என்ற சிறப்பு நிகழ்வு இன்று (மார்ச் 2, ஞாயிற்றுக்கிழமை) கன்யாகுமரியில்...
பண்டைய காலத்தில் நிடத நாட்டின் நீதியமைந்த மன்னனாக நளன் இருந்தான். அவரது பெருந்தன்மை, வீரத்தன்மை, அறிவு, அறிமுகமான கட்டுப்பாடு ஆகியவற்றால் நாட்டின் மக்கள் அவரை அன்புடன் கொண்டாடினார்கள்....