இந்த பெயர்களோடு குழந்தை ராமர் படமும் அழைப்பிதழில் இடம் பெற்றுள்ளது.
இந்த அடிக்கல் நாட்டு விழாவில் மோடி 40 கிலோ வெள்ளி பிரதமர் செங்கல்லை நிறுவுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் கர்நாடக முதல்வர் என நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் உட்பட 18 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், தற்போது அயோத்தியில் ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்க இருக்கும் சிறப்பு அழைப்பாளர்களின் பட்டியல் சுருக்கப்பட்டுள்ளது.
ராமர் கோயிலின் அடிக்கல் நாட்டு விழா அழைப்பிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி பிரதமர் மோடி, ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் (RSS) தலைவர் மோகன் பகவத், உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் மகாந்த் நிருத்யா கோபால்தாஸ் ஆகியோர் ஐந்து பேர் மேடையில் இருப்பார்கள்.
முதல் அழைப்பு அயோத்தி வழக்கில் முஸ்லீம் வழக்குரைஞர்களில் ஒருவரான இக்பால் அன்சாரிக்கு சென்றதாக செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது. “இது ராமரின் விருப்பம்” என்று அவர் கூறியுள்ளார். மேலும் இதுவரை 150 பேருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த அடிக்கல் நாட்டு விழாவில் மோடி 40 கிலோ வெள்ளி செங்கல்லை பிரதமர் நிறுவுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விழாவிற்கு, ராமர் கோயில் பிரச்சாரத்தில் முக்கிய முகங்களாக இருந்த அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முருகப்பெருமானின் பக்தி வழிபாட்டில் முக்கியமான தைப்பூசத் திருவிழா தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். தமிழ் மாதமான "தை"-யில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி...
1990 ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் காடையர்களால் நாளுக்கு நாள் மட்டக்களப்பு அம்பாறை வாழ் தமிழ் சமூகங்களுக்கு எதிரான வன்முறைகள் கொலைகள் என்று அதிகரித்து கொண்டே இருந்தது அந்த...
128 வயது பழக்கப்பட்டு, கும்பமேளாக்களில் பங்கேற்று சாதனை புரிந்துள்ள சுவாமி சிவானந்த பாபாவின் வாழ்க்கை பலர் நம்ப முடியாத அதிசயங்களின் தொகுப்பாக உள்ளது. அவர் வாழ்க்கை முறையும்...
அன்னிய மோகத்தால் சீரழியும் ஹிந்து குடும்ப அமைப்பும், அதை மீட்கும் வழியும் அறிமுகம் இன்றைய சமூக அமைப்பு மாறிவரும் உலக அரசியல், பொருளாதார மற்றும் கலாசார தாக்கங்களால்...