அயோத்தியில் பாஜக அதிக செல்வாக்கு மிகுந்த கட்சியாக இருந்தபோதிலும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கம் குறித்து அதிக அளவு விமர்சனங்களை ஆளும் கட்சிகள் எதிர்கொண்டுள்ளன.
நாளை உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோயில் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில், புத்தம் புதிய விமான நிலையம் மற்றும் ஒரு ரயில் நிலையத்தை உள்ளடக்கிய ரூ .500 கோடிக்கும் அதிகமான அளவு செலவினங்களுடன் கூடிய திட்டத்தினை உத்தரப்பிரதேச அரசு தற்போது அறிவித்துள்ளது.
ராமர் கோயில் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் 2024 ஆம் ஆண்டளவில் அயோத்தி ஒரு பெரிய மத சுற்றுலாத் தலமாக தரம் உயர்த்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி, அயோத்தியில் விஐபிகளின் பயன்பாட்டிற்காக தற்காலிக விமான நிலையம் உள்ளது. பின்வரும் நாட்களில் இது அனைவருக்கும் பயன்படும் விமான நிலையமாக மாற்றப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தினை இரண்டாண்டுகளுக்கு முன்னரே மாநில அரசு அறிவித்திருந்தது. ஆனால், திட்டத்தின் செயல்பாடுகளில் பெரிய அளவு முன்னேற்றம் ஏற்படவில்லை. அரசாங்கம் இன்னும் நிலம் கையகப்படுத்தும் பணியிலேயே உள்ளது.
தேசிய நெடுஞ்சாலை மேம்படுத்தலுக்கு 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. நீர் வழங்கல் திட்டத்தினை மேம்படுத்தவும் 54 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போல பேருந்து நிலையத்தினை மேம்படுத்த ரூ .7 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பழம்பெரும் துறவியும் கவிஞருமான கோஸ்வாமி துளசிதாசுக்கு மண்டபம் அயோத்தியில் உள்ளது. இதனை மேம்படுத்த ரூ .16 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் ராஜ்ஸ்ரீ தஸ்ரத் மருத்துவக் கல்லூரியும் மேம்படுத்தப்படும், 134 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அயோத்தியில் பாஜக அதிக செல்வாக்கு மிகுந்த கட்சியாக இருந்தபோதிலும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கம் குறித்து அதிக அளவு விமர்சனங்களை ஆளும் கட்சிகள் எதிர்கொண்டுள்ளன.
அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, 2003 மற்றும் 2012 க்கு இடையில், அயோத்தி-பைசாபாத் பகுதியில் உள்ள தொழில்துறை பிரிவுகளின் எண்ணிக்கை 377 முதல் 426 வரை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னிய மோகத்தால் சீரழியும் ஹிந்து குடும்ப அமைப்பும், அதை மீட்கும் வழியும் அறிமுகம் இன்றைய சமூக அமைப்பு மாறிவரும் உலக அரசியல், பொருளாதார மற்றும் கலாசார தாக்கங்களால்...
அன்னிய மோகத்தால் சீரழியும் ஹிந்து குடும்ப அமைப்பும், அதை மீட்கும் வழியும் அறிமுகம்: இன்றைய உலகம் வேகமாக மாறி வருகிறது. மனிதன் வாழ்வில் அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன்...
திருவாங்கூர் சமூக வரலாறு மற்றும் பெண்கள் மீதான அடக்குமுறை: விரிவான ஆய்வு பெருமைமிகு திருவாங்கூர் மண்டலம்:திருவாங்கூர் மண்டலம் என்பது 18ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதி...
பாரத சுதந்திர வரலாறு இந்திய சுதந்திரப் போராட்டம் மிகவும் நீண்ட காலம் நடந்தது. இது மூன்று முக்கிய கட்டங்களாக வகுக்கப்படுகிறது: முதல் கட்டம்: தொடக்கப் போராட்டங்கள் (1857...
திருவிடைக்கோடு மகாதேவர் கோவில் மிகச் சிறப்பாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தின் பழம்பெரும் சிவாலயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆலயத்தின் அமைப்பு சோழர் மற்றும் பல்லவர் கால கட்டமைப்புகளை பிரதிபலிக்கிறது....
2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வெற்றி மற்றும் சர்வதேச பாராட்டுகள் 2024 ஆம் ஆண்டு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு புதிய வரலாறு எழுதப்பட்டது. கடந்த...