அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதை தொடர்ந்து, இந்தியா முழுவதும் பல்வேறு தரப்பு மக்கள், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
அயோத்தியில் ராமர் கோயிலுக்கு பூமி பூஜை நடப்பதை கொண்டாடும் வகையில், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள், வாஷிங்டன்னில் ஒன்று கூடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 400 ஆண்டுகால போராட்டம் மற்றும் பலரின் தியாகத்தால், நீதிக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.