வீடுகள் தோறும் நாளை (ஆக.,9) விளக்கேற்றி கந்தசஷ்டி ஒலிக்க செய்து கடவுள் முருகனை வழிபடும் படி தமிழக பா.ஜ. மற்றும் பரிவார் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
கந்தசஷ்டி கவசத்தை இழிவுப்படுத்திய கயவர் கூட்டத்திற்கு எதிராக வேல் பூஜை நடத்த தமிழக பா.ஜ. அழைப்பு விடுத்துள்ளது. ஆடி மாதம் சஷ்டி தினமான நாளை மாலை 6:00 மணிக்கு அவரவர் வீடுகளில் விளக்கேற்றி கந்தசஷ்டி ஒலிக்க செய்து கடவுள் முருகனை வழிபடும் படி பொதுமக்களுக்கு பா.ஜ. வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாளை வேல் பூஜை நடக்க உள்ளதையொட்டி அனைவருக்கும் கந்த சஷ்டி புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழக பா.ஜ. தலைவர் முருகன் வீட்டில் நேற்று நடந்தது.கந்த சஷ்டி புத்தகங்களை முருகன் வழங்கினார்.
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியதாவது: தமிழகத்தில் சமீப காலமாக கடவுள் மறுப்பு என்ற பெயரில் கடவுள்களை இழிவாக பழிப்பவர் கூட்டம் ஒன்று தலைதுாக்கியுள்ளது. இனி எவருக்கும் அந்த எண்ணம் கூட வரக் கூடாது. எனவே நமது பக்தியை சக்தியை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
இதற்காக நாளை நம் பலத்தை காட்டுவோம். அன்று மாலை 6:00 மணிக்கு அவரவர் வீட்டின் முன் கோலமிட்டு முருகன் படம் அல்லது வேல் வைத்து பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அன்னிய மோகத்தால் சீரழியும் ஹிந்து குடும்ப அமைப்பும், அதை மீட்கும் வழியும் அறிமுகம் இன்றைய சமூக அமைப்பு மாறிவரும் உலக அரசியல், பொருளாதார மற்றும் கலாசார தாக்கங்களால்...
அன்னிய மோகத்தால் சீரழியும் ஹிந்து குடும்ப அமைப்பும், அதை மீட்கும் வழியும் அறிமுகம்: இன்றைய உலகம் வேகமாக மாறி வருகிறது. மனிதன் வாழ்வில் அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன்...
திருவாங்கூர் சமூக வரலாறு மற்றும் பெண்கள் மீதான அடக்குமுறை: விரிவான ஆய்வு பெருமைமிகு திருவாங்கூர் மண்டலம்:திருவாங்கூர் மண்டலம் என்பது 18ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதி...
பாரத சுதந்திர வரலாறு இந்திய சுதந்திரப் போராட்டம் மிகவும் நீண்ட காலம் நடந்தது. இது மூன்று முக்கிய கட்டங்களாக வகுக்கப்படுகிறது: முதல் கட்டம்: தொடக்கப் போராட்டங்கள் (1857...
திருவிடைக்கோடு மகாதேவர் கோவில் மிகச் சிறப்பாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தின் பழம்பெரும் சிவாலயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆலயத்தின் அமைப்பு சோழர் மற்றும் பல்லவர் கால கட்டமைப்புகளை பிரதிபலிக்கிறது....
2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வெற்றி மற்றும் சர்வதேச பாராட்டுகள் 2024 ஆம் ஆண்டு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு புதிய வரலாறு எழுதப்பட்டது. கடந்த...