திருப்பதியில் கொரோனா பாதிக்கப்பட்ட தேவஸ்தான ஊழியர்களில் 402 பேர் தொற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. ஆந்திராவில் கொரோனா தொரோனா தொற்றை கட்டுக்குள் வைக்க அம்மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது ஜூன் மாதத்தில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப் படுகின்றனர். கடந்த 2 மாதங்களில் திருப்பதியில் அர்ச்சகர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் உள்ளிட்ட 743 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். நோய் தொற்றில் இருந்து 402 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 338 பேர் தனியார் மையங்களிலும், மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 ஊழியர்கள் இதுவரை பலியாகியுள்ளனர்.
திருப்பதியில் ஜூலையில் சுமார் 2.38 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் கூறுகையில், திருமலையில் 743 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் சிகிச்சையில் உள்ளனர். கோவிலில் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறது. ஏழுமலையான் கோவிலுக்கு காணிக்கையாக 16 கோடியே 19 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த 2 மாதங்களில் 11.35 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேலும் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு தெரிவித்தார்.
கர்மயோகினி சங்கமம்: கன்யாகுமரியில் 50,000 பெண்கள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு கர்மயோகினி சங்கமம் என்ற சிறப்பு நிகழ்வு இன்று (மார்ச் 2, ஞாயிற்றுக்கிழமை) கன்யாகுமரியில்...
பண்டைய காலத்தில் நிடத நாட்டின் நீதியமைந்த மன்னனாக நளன் இருந்தான். அவரது பெருந்தன்மை, வீரத்தன்மை, அறிவு, அறிமுகமான கட்டுப்பாடு ஆகியவற்றால் நாட்டின் மக்கள் அவரை அன்புடன் கொண்டாடினார்கள்....
18 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை துவாரகா கடலில் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சியைத் தொடங்கியுள்ளது. கடலுக்கு அடியில் மூழ்கியுள்ள கிருஷ்ணரின் கர்ம பூமியைக் கண்டறியும் முயற்சியின்...
ஸநாதனம் – ஒரு சவால்… எழுதியவர் சுவாமி சைதன்யானந்தர் (1) ஸநாதனம் - ஒரு சவால் தொடர்ச்சி... அறிவிலிகள் கூறும் ஸநாதனம் ஆனால், அதிமேதாவிகள் எனத் தங்களைத்...
முருகப்பெருமானின் பக்தி வழிபாட்டில் முக்கியமான தைப்பூசத் திருவிழா தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். தமிழ் மாதமான "தை"-யில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி...
1990 ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் காடையர்களால் நாளுக்கு நாள் மட்டக்களப்பு அம்பாறை வாழ் தமிழ் சமூகங்களுக்கு எதிரான வன்முறைகள் கொலைகள் என்று அதிகரித்து கொண்டே இருந்தது அந்த...