சுகாதாரத் துறை எதிர்ப்பால், சபரிமலையில் ஐப்பசி மாத பூஜையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிகிறது.கொரோனா பரவலால், கடந்த மார்ச் முதல், சபரிமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனினும் கார்த்திகை, 1ம் தேதியான நவ., 16 முதல் பக்தர்கள், ஆன்லைன் முன்பதிவு மூலம் அனுமதிக்கப்படுவர் எனவும், அதற்கான ஆலோசனைகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு முன்னோடியாக, ஐப்பசி மாத பூஜையின் போது, குறிப்பிட்ட அளவு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. ஐப்பசி மாத பூஜைகள் அக்., 16ல் தொடங்க உள்ளன.ஆனால், பக்தர்களை அனுமதிக்க, சுகாதாரத்துறை எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கேரளாவில் தற்போது கொரோனா வேகமாக பரவி வருவதால், பக்தர்களை அனுமதித்தால் அது மேலும் பரவலை அதிகரிக்கும் என, அதிகாரிகள் கருதுகின்றனர். இதனால், ஐப்பசி மாதத்திலும் பக்தர்கள் சபரிமலை செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தேவசம் போர்டு தலைவர் வாசு கூறியதாவது:ஐப்பசி மாத பூஜையில், பக்தர்களை அனுமதிப்பதன் மூலம் மண்டல, மகரவிளக்கு காலத்தில், பக்தர்களை அனுமதிக்க உதவியாக இருக்கும் என கருதப்பட்டது. சுகாதாரத் துறை எதிர்ப்பால், எங்கள் முடிவை வாபஸ் பெற்றுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
கர்மயோகினி சங்கமம்: கன்யாகுமரியில் 50,000 பெண்கள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு கர்மயோகினி சங்கமம் என்ற சிறப்பு நிகழ்வு இன்று (மார்ச் 2, ஞாயிற்றுக்கிழமை) கன்யாகுமரியில்...
பண்டைய காலத்தில் நிடத நாட்டின் நீதியமைந்த மன்னனாக நளன் இருந்தான். அவரது பெருந்தன்மை, வீரத்தன்மை, அறிவு, அறிமுகமான கட்டுப்பாடு ஆகியவற்றால் நாட்டின் மக்கள் அவரை அன்புடன் கொண்டாடினார்கள்....
18 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை துவாரகா கடலில் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சியைத் தொடங்கியுள்ளது. கடலுக்கு அடியில் மூழ்கியுள்ள கிருஷ்ணரின் கர்ம பூமியைக் கண்டறியும் முயற்சியின்...
ஸநாதனம் – ஒரு சவால்… எழுதியவர் சுவாமி சைதன்யானந்தர் (1) ஸநாதனம் - ஒரு சவால் தொடர்ச்சி... அறிவிலிகள் கூறும் ஸநாதனம் ஆனால், அதிமேதாவிகள் எனத் தங்களைத்...
முருகப்பெருமானின் பக்தி வழிபாட்டில் முக்கியமான தைப்பூசத் திருவிழா தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். தமிழ் மாதமான "தை"-யில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி...
1990 ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் காடையர்களால் நாளுக்கு நாள் மட்டக்களப்பு அம்பாறை வாழ் தமிழ் சமூகங்களுக்கு எதிரான வன்முறைகள் கொலைகள் என்று அதிகரித்து கொண்டே இருந்தது அந்த...