கொரோனா னைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கேரளாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருவதால் அதனை கட்டுப்படுத்த அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. ஆயினும் ஊரடங்கு தளர்வுகளையொட்டி, பல்வேறு பாதுகாப்பு விதிமுறையுடன் கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. நோய் தொற்றால் கடந்த 7 மாதங்களாக சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இந்நிலையில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக, நாளை மாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. ஐந்து நாட்கள் நடை திறந்திருக்கும் நிலையில், தினமும், 250 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயமாக, மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட முக்கிய சுகாதார நடவடிக்கையை பின்பற்ற வேண்டும். இதற்காக, 48 மணி நேரத்துக்கு முன் எடுக்கப்பட்ட, ‘கொரோனா இல்லை’ என்பதற்கான உறுதிசெய்யப்பட்ட சான்றிதழுடன் செல்ல வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் இருந்தும், முன்பதிவு துவங்கிய சில நிமிட நேரங்களுக்குள் முடிந்து விட்டது. மொத்தம் 1,250 பக்தர்கள் சபரிமலை செல்ல தயாராகி உள்ளனர். நாளை மாலை, 5:00 மணிக்கு மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி, நடை திறந்து தீபம் ஏற்றுவார். தந்திரி கண்டரரு ராஜீவரரு, பிரசாதம் வழங்குவார். இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை மறுநாள் அதிகாலை, 5:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரையிலும், மாலை, 5:00 முதல் இரவு, 10:00 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். அக்., 21 இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
பக்தர்கள் பம்பையில் குளிக்க முடியாது. சுவாமி ஐயப்பன் ரோட்டை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆங்காங்கே கைகழுவ சோப்பு, தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது. நெய் பக்தர்களிடம் வாங்கி அபிஷேக நெய் பிரசாதம் வழங்கப்படும். பின், அப்பம், அரவணை வாங்கி விட்டு பம்பை திரும்பி விட வேண்டும்.கோயில் முன்புறம் உள்ள, முதல் மற்றும் கடைசி வரிசைகளில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
முருகப்பெருமானின் பக்தி வழிபாட்டில் முக்கியமான தைப்பூசத் திருவிழா தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். தமிழ் மாதமான "தை"-யில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி...
1990 ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் காடையர்களால் நாளுக்கு நாள் மட்டக்களப்பு அம்பாறை வாழ் தமிழ் சமூகங்களுக்கு எதிரான வன்முறைகள் கொலைகள் என்று அதிகரித்து கொண்டே இருந்தது அந்த...
128 வயது பழக்கப்பட்டு, கும்பமேளாக்களில் பங்கேற்று சாதனை புரிந்துள்ள சுவாமி சிவானந்த பாபாவின் வாழ்க்கை பலர் நம்ப முடியாத அதிசயங்களின் தொகுப்பாக உள்ளது. அவர் வாழ்க்கை முறையும்...
அன்னிய மோகத்தால் சீரழியும் ஹிந்து குடும்ப அமைப்பும், அதை மீட்கும் வழியும் அறிமுகம் இன்றைய சமூக அமைப்பு மாறிவரும் உலக அரசியல், பொருளாதார மற்றும் கலாசார தாக்கங்களால்...