மகாபாரதம் – 59… அனுசாசனிக பருவம்… கிராத புயங்க சம்வாதச் சருக்கம்

0
55

முன்னர் வந்த சாந்தி பருவத்திற்கு உபகரணமாய்க் கல்வெட்டு போல என்றும் நிலைத்திருக்கும் உபதேசம் என்பதே அனுசாசனம் என்பதற்கு பொருளாகும். அஃதாவது சாந்தி பருவத்தில் கூறிய தர்மங்களையொப்ப இந்த பருவத்திலும் தர்மங்களை உபதேசித்தல் என்ற கருத்தை இத்தொடர் விளக்குகின்றது.

    இந்தப் பருவம் (1) கிராத புயங்க சம்வாத சருக்கம் (2) இந்திர மதங்க சம்வாத சருக்கம் (3) கன்னியதானவரன் பெருமிதம் உரைக்க சருக்கம் (4) உமாமகேஸ்வர சம்வாத சருக்கம் (5) வீடுமன் முத்தியடைந்த சருக்கம் என ஐந்து பகுதிகளைக் கொண்டதாகும்.

    கிராதன் – வேடன். பெயர் அர்ஜூனன்; புயங்கம் – பாம்பு: அர்ஜூனன் என்ற வேடனுக்கும் ஒரு பாம்புக்கும் நடந்த தருக்கத்தைப் பற்றி கூறும் சருக்கம் இதுவாகும்.

    “இந்தச் சருக்கத்தில்தான் பாரத யுத்தத் தில் ஆயிரக்கணக்கான அரசர்களும், வீரர் களும் இறந்து போனதற்குக் காரணமான செயல் உன்னாலோ, துரியோதனனாலோ நடத்தப்பட்டதன்று. காலத்தினால் செய்யப்பட்டது” எனப் பீஷ்மர் தர்மபுத்திர ருக்குத் தெளிய வைத்துள்ளார் எனலாம்.

    மாலையைத் தரித்த விதுரர், கிருபாசாரி யார், சஞ்சய முனிவன், தர்மபுத்திரர் முதலாய பாண்டவர், கண்ணபிரான், உயர்ந்த முனிசிரேட்டர்கள், அந்தணப் பெருமக்கள் முதலானோர் மறுநாள் காலையில் நீராடி காலைக் கடன்களை முடித்து கொண்டு அம்பு படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கும் கங்கை மைந்தனாகிய பீஷ்மரிடம் வந்தார்கள்.

    வந்த தர்மபுத்திரர் பீஷ்மரை வணங்க, பிதாமகர் பீஷ்மர் ”தர்மபுத்திரரை ஆசீர்வதித்து, ‘தர்ம நந்தனா; இன்னும் உன் மனத்தில் எழும் சந்தேகங்களைக் கேட்க லாம். ஏற்ற முறையில் சொல்கின்றேன்” என்று கூறினார்.

    1) அப்பொழுது தர்மபுத்திரர், “பிதா மகரே! எமக்குரிய நாட்டினைக் கொடுக்காத துரியோதனாதியரைக் கொன்றதே பாவம்; அவனோடு ஏனைய துணையாக வந்த வேந்தரைக் கொன்றது பெரும் பாவ மல்லவா? அந்த பாவத்தை போக்கு தற்குரிய கழுவாய் என்ன? சொல்லுங்கள்” என்று கேட்டார்.

    அப்பொழுது பீஷ்மர், “முன்னொரு காலத்தில் தூய்மையான வேதியன் ஒருவன் மனைவி கெளதமி என்பவள் பெற்ற பிள்ளையைப் பாம்பு ஒன்று தீண்டி, அப்பிள்ளை இறந்து போயிற்று. பிள்ளை யைப் பறி கொடுத்த தாய் கதறுதலைப் பார்த்து வேடன் ஒருவன், பிள்ளையைத் தீண்டிய பாம்பினைப் பிடித்து வந்து அவளுக்குக் காட்டி “நங்கையே! அழ வேண்டாம். உன் பிள்ளையைத் தீண்டிய இந்தப் பாம்பை சும்மா விடப்போவ தில்லை கொன்று விடப்போகிறேன்” என்று கோபத்தோடு கூறினான். அதற்கு இலக்குமி போல அழகொடு விளங்குகின்ற அந்த கௌதமி, “ஐயா! நான் செய்த பாவத்தினால் என் குழந்தை பாம்பு தீண்டி மரித்தது. ஆகவே இந்தப் பாம்பினைக் கொல்லாதே விட்டு விடு” என்றாள்.

    வேடன் புகன்ற வேதமொழி

    அதைக்கேட்ட வேடன், ”பெண்ணே!”தன்னைக் கொல்ல வந்த பசுவையும் கொல்லலாம்” என்பது சான்றோர் வாக்கு. அது நியாயமானதும்கூட. ஆகலின் உன் குழந்தையைத் தீண்டிய இப்பாம்பினைக் கொன்றுதான் தீர வேண்டும். அதனால் எந்தப் பாவமும் உனக்கு ஏற்படாது. மாறாக இதனை உயிரோடு விட்டால்தான் நமக்குப் பாவம்” என்று உறுதியாகக் கூறினான்.

    வேடன் கருத்தை அப்பார்ப்பனப்பெண் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் அப்பெண், “அண்ணே! என் குழந்தையைத் தீண்டியதால் இப்பாம்பை கொல்ல வேண் டும் என்கிறாய்; ஒப்புக் கொள்கிறேன்; ஆனால் இப்பாம்பைக் கொல்லுவதால் என் குழந்தை பிழைத்தெழுமா? (எழ மாட் டான்) என் குழந்தை பிழைத்து எழுவ தாயிருந்தால் இந்தப் பாம்பினைத் தாராள மாக நீ கொல்லலாம். உண்மையில் நீ என் துயரத்தை போக்க வேண்டுமென்று கருது வாயானால், இப்பாம்பைக் கொல்லாது விட்டு விடுவாயாக” என்று கூறினாள்.

    பார்ப்பனப் பெண் கௌதமி கூறிய மொழிகளையெல்லாம் கண்ணே செவியாகவுடைய கட் செலி என்னும் அப்பாம்பு நன்றாக உற்றுக் கேட்டது. பின்னர் அந்த வேடனை நோக்கி, “வேடனே! நானாக இக்குழந்தையைத் தீண்டவில்லை இயம தேவன் ஏலியபடியே தான் இக்குழந் தையைத் தீண்டினேன். ஆகையால் தீண்டு தல் (கடித்தல்) தொழிலை மட்டும் செய்த என்னைக் கொல்லுதல் எவ்வாறு நியாய மாகும்? ஆகலின் என்னை விட்டு விடு என்றது.

    உடனே அறிவுடைய அந்த வேடன், “பாம்பே! இயமன் ஏவியபடி செய்தேன் என்கிறாய். அப்படி என்றால் இந்திராதி தேவர்கள் எல்லாம் நீ செய்த செயலை முன்னமே அறிந்திருக்க வேண்டும். திட்ட மிட்டுத்தான் இயமனுடன் சேர்ந்து இக் குழந்தையைக் கொன்றுள்ளீர்கள். எனவே உன்னைக் கொல்லத் தான் வேண்டும். அதுதான் நீ செய்த செயலுக்குப் பரிகாரம் ஆகும்” என்றான்.

    இயமனையும் கொல்ல துணிந்த வேடன்

    அப்பொழுது இயமன் அங்கு வந்தான். அவன் வேடனைப் பார்த்து, “வேடனே! நஞ்சுடைய இந்நாகத்தை கொல்லுதல் கூடாது. கோபித்துக் கொள்ளாதே. கால புருஷன் ஏவியபடி நான் செய்தேனே தவிர நானாக ஒன்றும் செய்யவில்லை. அப்படி யிருக்க எங்கள் இருவரை மட்டும் ஏன் குற்றம் சாட்டுகிறாய்?” என்றான். அதற்கு வேடன், “இயமதேவனே! பாம்பைக் கொல்லுதற்குச் சித்தமாய் எடுக்க வந்த கணையைத் தடுத்தவனாகிய நீயும் இக் குழந்தை இறந்ததற்குக் காரணமாகிறாய். எனவே பாம்போடு உன்னையும் கொல்ல வேண்டியதுதான்” என்றான்.

    வேடன் இவ்வாறு இயமனோடு வாதிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் கல புருஷன் அவ்வேடன் முன் வந்து நின்றான். அவன் அவ்வேடனை பார்த்து, “வேடனே! உயிர்கள் முற்பிறவியில் செய்துள்ள கர்மாக் களுக்கு ஈடாக இப்பிறப்பில் மரணம் ஏற்படுகின்றது. அவரவர் மரணத்திற்கு அவரவர் கர்ம வினைகளே காரணம்.

    நானோ, இந்த யமனோ, இந்த பாம்போ இக்குழந்தை இறந்ததற்கு முதற்காரணங்கள் ஆக மாட்டோம். ஆதலால் நாங்கள் குற்றவாளிகள் இல்லை. நாங்கள் அனை வரும் கர்மத்திற்கு உட்பட்டவர்கள். அவரவர் செய்கின்ற கர்மங்கள்தான் எங்களை ஏவுகின்றன. அதற்குத் தக்கபடி நாங்கள் ஒருவரையொருவர் ஏவுகின்றோம். ஆதலால் கால புருஷனாகிய நான், இயமன், இயமன பாம்பு, இந்தப் பார்ப்பினி கௌதமி, நீ, முதலானவர்கள் எல்லாம் இந்த குழந்தையின் இறப்பிற்குக் கார ணங்கள் ஆக முடியா. இந்த குழந்தையே காரணம்; அஃதாவது அது முற்பிறவியில் செய்த கர்மாவே காரணம் ” என்று விரிவாகக் கூறினான்.

    இவற்றையெல்லாம் கேட்ட அப்பார்ப் பனப் பெண் கௌதமி “ஐயன்மீர்! விதியினை வென்றவர் எவருமில்லை; ஆகவே வீணாகப் பேசி வாதம் செய்து கொண்டிருப்பதால் என்ன பயன்? என் குழந்தையா பிழைத்து வரப் போகிறது! இந்த வாதம் தேவையில்லை;நிறுத்திக் கொள்ளுங்கள். சூரியன் மறைவதற்கு முன்பு இறந்த என் மைந்தனுக்குச் செய்ய வேண்டிய ஈமச்சடங்குகளைச் செய்து முடிக்க வேண்டும்” என்று கூறி வேடனிட மிருந்து பாம்பை விடுவித்து அதனை உயிரோடு அனுப்பினாள். குழந்தைக்குச் செய்ய வேண்டியன செய்ய அவள், தொடங்கி விட்டாள். வேடன், இயமன், காலபுருஷன் ஆகியோரும் தத்தம் இருப் பிடங்களுக்கு ஏகினர்” என்று கூறிய அவர்,

    கர்மவினைகளினால் நடக்கும் காரியங்கள்

    மேலும், ”தர்மராசனே! ஒரு நிகழ்ச்சிக்கு இதுதான் காரணம் என்று அறுதியிட்டு உறுதியாகக் கூற முடியாது. அவ்வாறே போரில் வீரர்கள் இறந்து போன தற்குக் காரணமான செய்கை, உன்னால் செய்யப் பட்டதன்று. காலத்தினாலும், அவரவர் கர்ம வினைகளினாலும் நடக்கின்றன என்பதை அறிவாயாக” என்று கூறினார்.

    2) இதனைக் கேட்டு தர்மபுத்திரர் மீண்டும் பிதாமகர் பீஷ்மரை நோக்கி. “மரணத்தை வென்ற இல்லறத்தான் இருக்கின்றானா? கூறுக” என கேட்டார்.

    சுதர்சனை

    அதற்குப் பிதாமகர் பீஷ்மர், ”தர்ம புத்திரா! மனுவம்சத்தில் துரியோதனன் என்ற பெயருடைய அரசன் ஒருவன் இருந் தான். இந்தத் துரியோதனன் திருதராட்டிரர் மகன் துரியோதனன் அல்லன். இவன் திருத ராட்டிரர் மகனைப் போல் அல்லாமல், ஒழுக்க சீலனாகவும், பண்புள்ளவனாகவும் இருந்ததோடு செலுத்தி வந்தான். செங்கோலாட்சியும்

    அவன் தன் அழகு மிக்க ‘சுதர்சனை’ என்னும் பெண்ணை அங்கியங் கடவுளான அக்னி பகவானுக்குத் திருமணம் செய்து கொடுத்தான். அத்தம்பதியினர்க்கு ஓர் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு ‘சுதர்சனன்’ என்று பெயரிட்டுச் சீரும் சிறப்புமாக வளர்த்தனர். அவன் எல்லாக் கலைகளையும் எளிதில் கற்றுத் தேர்ந்து ஓர் அந்தணன் பெற்ற யோகவதி (ஒகபதி) என்ற நங்கையை மணந்து கொண்டு இல்லறம் நடத்தி வந்தான்.

    ஒருநாள் அவன் தன் மனைவியிடம். “விருந்தினர்கள் மும்மூர்த்திகளை காட்டி லும் உயர்ந்தவர்கள். அத்தகையவர்களை வரவேற்று, வழிபட்டு உபசாரம் செய்து பூசித்தல் நமக்குக் கடன்; அது மட்டுமன்று; அந்த அதிதிகள் எது கேட்டாலும் கொடுக்க வேண்டியது நம் கடமை. உன்னோடு அந்த அதிதி சேர வேண்டுமென்று விருப்பம் தெரிவித்தாலும் அதற்கு அன்போடு நீ இசைந்திடல் வேண்டும். அஃது உன் கற்பின் எழுச்சிக்குச் சான்றாக விளங்கும். நான் வீட்டில் இல்லாவிடினும் அதிதிகள் வந்தால், அவர்களுக்கு ஏற்றபடி நடந்து உபசரிப்பாயாக” என்று கூறினான். பின் ஒரு நாள் உயர் தர்ப்பையையும், சமித்து களையும் காட்டிலிருந்து கொண்டு வர வீட்டை விட்டுப் போனான்.

    அவன் சென்றபின் ஓர் அந்தணன் யோகவதி இருக்கும் இடத்திற்கு வந்தான். அவள் அவனை வரவேற்று உபசரித்து, அமர ஆசனமும் தந்தாள். பின்னர், அவள் அடியேன் செய்ய வேண்டுவது யாது? என்று கேட்டாள். அதற்கு விருந்தினனாக வந்த அந்தணன், “பெண் தெய்வம் போன்றவளே! நான் காமவேதனையால் அவஸ்தைப்படுகின்றேன். என் மோகத் தைத் தீர்க்க வேண்டும்” என்று வேண்டி னான்.

    அதிதியின் பள்ளியறை விருப்பம்

    அதனைக் கேட்ட யோகவதி, ”ஐயா! கொடிய வார்த்தைகளைச் சொன்னீர். இதனைத் தவிர வேறு எது கேட்டாலும் கொடுப்பேன்” என்றாள். “வேறு எதையும் விரும்பேன் ” என்று மறையோன் கூற, முதலில் இசையாத யோகவதி, பின் கணவன் சொற்படி அதிதி விரும்பியதைச் செய்ய வேண்டும் என்று கூறியதன் காரணமாக புன்சிரிப்புடன் இசைந்தாள் யோகவதியைச் சேர்வான் வேண்டி அந்த அந்தணன் பள்ளியறையுள் புகுந்தான். அந்தப் போதினில் சமிதை கொண்டு வரக்காட்டிற்கு சென்ற அந்தணன் ‘சுதர்சனன்’ வந்து விட்டான். வந்த சுதர்சன் தன் மனைவியைக் கூப்பிட்டான் அவள் பதில் பேசவில்லை. விருந்தினராக வந்த மறையோன், சுதர்சனைப் பார்த்து, உன் மனைவி சிறப்புற விருந்தினரை உபசரிக்கின்றாள்” என்று சொல்ல, அதைக் கேட்டு அச்சுதர்சனன் மகிழ்ச்சி அடைந் தான்.

    அவன் வந்த விருந்தினரைப் பார்த்து, ”விருந்தினரே! என் மனைவிக்கு வருகின்ற விருந்தினரே எங்களுக்குத் தெய்வம்.

    அதைவிட வணங்கத்தக்க வேறு தெய்வம் கிடையாது. இது எங்கள் இருவரின் நியமம். இந்த விரதத்திற்குப் பஞ்ச பூதங்களே சாட்சி” என்றான். அப்பொழுது அசரீரி ஒன்று,”சுதர்சனன் கூறியன உண்மையே, அவன் கொண்ட விரதத்தின் படி நடக்கின்றான். அவன் மட்டுமல்லாது அவன் மனைவியும் அவன் விரதத்தின்படி நடக்கின்றாள்” என்றது.

    விருந்தினராக வந்த அந்த மறையோன் தன் சுய ரூபமான இயமன் வடிவத்தை எடுத்து எருமை வாகனத்தின் மீது அமர்ந்து தரிசனம் தந்தான். தரிசனம் தந்த இயம தேவனை அந்தச் சுதர்சனனும் அவன் மனைவி யோகபதியும் வணங்கி போற்றி னர்

    இயமதேவன் அருளிய வரம்

    அப்பொழுது இயமதேவன், “நீ விரும்பி யதைக் கேள் “என்று கேட்க, அதற்குச் சுதர்சனன் மனமகிழ்ந்து இயமன் நெருங்கா வரத்தை அருள வேண்டும் என்று கேட்டான். இயமனும் பூவுலகில் மிகுதி யான ஆண்டுகள் நலமுடன் வாழ்ந்து, பின் சொர்க்கம் புகுவாய் என்னலோடு அவன் மனைவி யோகவதியைப் பார்த்து, “நங்கையே! பர்த்தாவுக்கேற்ற பதிவிரதைப் பெண்ணாக இருக்கின்றாய் ஆதலின் நீண்ட நாள் நின் கணவனோடு வாழ்ந்து, பின் உலக உயிர்களின் பாவத்தைப் போக்கு வதற்காக வேகவதி நதியாகப் பாய் வாயாக” என்று கூறி அருள் செய்து தன் இருப்பிடம் சேர்ந்தான் என்கின்ற கதையைக் கூறி, பின்னர் ”இத்தகைய பெருவாழ்வு பெற்ற இல்லறத்தார்களுக்கு மரண பயம் என்பது ஏதும் இல்லை” என்று பீஷ்மர் தர்மபுத்திரருக்குப் பதிலளித்தார்.

    மகாபாரதம் – 59… அனுசாசனிக பருவம்… கிராத புயங்க சம்வாதச் சருக்கம் | Asha Aanmigam

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here