மகாபாரதம் – 57 பீஷ்மரைக் கண்ட சருக்கம்… நால்வகை ஆசிரமங்கள் பற்றிப் பீஷ்மர் கூறுதல்

0
41

உலக உயிர்களைத் தாயினும் மேலாகப் பாதுகாத்து ஆட்சி செய்கின்ற தருமபுத்திரர், கண்ணபிரானோடு கலந்து ஆலோசித்து, அக்கண்ணபிரானோடும், முனிவர்கள் பலரோடும், தம்பியர்களோடும், கலை வல்லாரோடும் தேரேறி அம்பணையில் படுத்துக் கிடந்து உத்தராயணத்தை எதிர் நோக்கியிருக்கும் பாட்டனாரான பீஷ்மரின் இருப்பிடம் சேர்ந்தார்கள். அங்கு தரும புத்திரர் முதலானோர் பிதாமகர் பீஷ்மரின் திருவடிகளை வணங்கினார்கள். அதனைக் கண்டு பிதாமகர் பீஷ்மர் மகிழ்ந்து, “இங்கு வந்ததற்குரிய காரணம் யாது? எனக்கேட்டார்.

அதற்குக் கண்ணபிரான், “பிதாமகர் பீஷ்மரே! நீங்கள் கூறியபடியே தரும புத்திரர் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளார். உலகத்தைக் காக்கக்கூடிய தரும நெறி களைத் தங்களிடமிருந்து அறிந்து கொள் வதற்காகத் தன் தம்பியரோடும், விதுர ரோடும், சஞ்சயனோடும், கிருபாசாரிய ரோடும் இங்கு வந்துள்ளார்” என்று கூறினார்.

பிரபாசன் பதவி

‘பிதாமகரே! உமது வாயிலிருந்து வரும் தத்துவங்களையுணர வேண்டி வந்துள்ள பாண்டவர்களுக்கு நானே எடுத்துச் சொன்னாலும் அவர்களுடைய மயக்கம் தெளியாது. ஆதலின் போர் தொடங்குவ தற்கு முன் இருந்த பேசவல்ல வன்மையை உமக்கு இப்பொழுது கொடுத்தோம். பாண்டவர்களின் மயக்கத்தைத் தெளிவிப் பாயாக” என்று கண்ணன் கூற, அப்பெரு மான் திருவருளால் பேச்சுவன்மை பெற்ற பீஷ்மர், “அசையும் பொருள்களில், அசையாப் பொருள்களில், உருவமாகவும் உருவமற்ற அருவமாகவும், ஓரிடத்திலே இருப்பவனாகவும், இல்லாதவனாகவும் பஞ்ச பூதங்களில் இருப்பவனாகவும், இல்லாதவனாகவும், அங்கிங்கெனாதபடி எங்கணும் நீக்கமற நிறைந்திருப்பவனாக வும் விளங்க, முடிவில் யதுகுலத்தில் வசுதேவன் மகனாக தேவகி குடும்பத்தில் அவதரித்த செந்தாமரைக் கண்ணா! அன்று இரண்டு மருத மரங்களைச் சாய்த்து, நளகூபரன், மணிக்கிரீவன் என்ற குபேர புத்திரர்களுக்கு அருள்புரிந்த தங்கள் திருவடித்தாமரைக அடியேன், வீடுபெற வழங்கி அருள்வாயாக என்று உள்ளம் உருகப் போற்றினார்.

இவ்வாறு உள்ளம் உருகப் போற்றிய பிதாமகர் பீஷ்மரை, எம்பெருமானாகிய கண்ணபிரான் கண்டு மனமகிழ்ந்து, ”பீஷ்மரே! உனது உடலிலிருந்து உயிர் நீங்கும்போது அஷ்டவசுக்களில் கடைசிய வனாகிய பிரபாசன் பதவியை மீண்டும் பெற்றுச் சுவர்க்கலோகம் சேர்வாய்” என்று அருள்புரிந்தார். அஷ்ட வசுக்களில் பிரபாசன் என்பவன்தான் இந்தப் பிறவியில் கங்கையின் மைந்தனாக இப்பீஷ்மர் பிறந் தார் என்பது ஆதி பருவத்தில் சொல்லப் பட்டுளது. அதனைக் கேட்டு பீஷ்மர் ‘நல்லது’என்று கூறிப் பெருமானை மகிழ்வோடு வணங்கினார்.

அப்பொழுது பீஷ்மர் தருமபுத்திரரைப் பார்த்து, ”குரு நாட்டு மன்னவனே! உன்னுடைய சந்தேகங்களை என்னிடம் கேட்கலாம். உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெளிவாகக் கூறுகின்றேன்” என்று மனமகிழ்ச்சியோடு கூறினார்.

அதற்குத் தருமபுத்திரர், “பேரரசன் ஒருத்தனுக்கு இவ்வுலகமக்கள் அனை வரும் பணிந்து வணங்குவது எப்படி வாய்த்தது? மற்ற மக்கள் போல அல்லவா அவனும் இருக்க வேண்டும் ” என்று கேட்டார்.

அதற்குப் பிதாமகர் பீஷ்மர், “தரும நந்தனா! ஐம்புலன்களின் வழியே செல் கின்ற மனத்தையுடைய அரசனாக இருந் தாலும், அவன், அந்தணப் பெருமக்களை, மும்மூர்த்திகளைவிட மேலானவராகக் கொண்டு அவனை வழிபடுதல் வேண்டும். அவ்வாறு ஒருவன் வழிபட்டால் வலிமை, ஒளி, நீண்ட ஆயுள், நல்லமழை. அறிவார்ந்த புதல்வர்கள், போர் முனையில் வெற்றி, எத்தகைய பகைவர்களும் தனது பாதங்களை வணங்கும்பேறு முதலானவை கிட்டுவதோடு நல்ல அரசாட்சியைப் புரியும்படியான ஒப்பற்ற நற்பேறும் கிடைக்கும். அந்தணர்களின் பரிபூரண ஆசியைப் பெற்ற மன்னன், மிக அதிகமான குற்றம் செய்த அந்தணனையும் தண்டிக்க லாம். அதனால் அந்த மன்னனுக்குப் பாவம் புகாது. ஏனெனில் ஏற்கனவே அந்தணரிடத்துப் பெற்றுள்ள ஆசியின் பலனால் ஏற்பட்ட ஒரு பாக்கியமாகும்.”

அதன்பின் பீஷ்மர், தருமசாத்திரங்கள் பிறந்தவற்றையும், அவை உலகின் கண் பரவிய விதத்தையும் கூறலானார்.

“நான்முகனால் படைக்கப்பட்ட தேவர்கள், எது அஹிம்சை? எது பாவம்? எது இம்சை? எது புண்ணியம் ? என்பன பற்றித் தெளிவில்லாது மயங்கினார்கள்: இதனை அறிந்த நான்முகன் தேவர்கள் உணர்தற் பொருட்டு ஒரு நூறாயிரம் அத்தியாயங்கள் கொண்ட தருமசாத்திரம் ஒன்றை உருவாக்கினான். பிரம் மனது நெற்றியிலிருந்து தோன்றிய ஏகாதசருத் திரர்கள் அதனை, பதினாயிரம் அத்தியாயங் களை உடையதாய்ச் சுருக்கினார்கள். அந்த நூலைத் தேவேந்திரன் ஐயாயிரம் அத்தியா யங்களைக் கொண்டதாய்ச் சுருக்கினான். பின்னும் அதனைத் தேவ குருவாகிய பிரகஸ்பதி மூவாயிரம் அத்தியாயங்களைக் கொண்டதாய்ச் சுருக்கித் தந்தார். அதன் பின்னும் அதனை அசுர குருவாகிய சுக்கிராச்சாரியார் ஆயிரம் அத்தியாயங் களைக் கொண்டதாய் சுருக்கித் தந்தார்.

இந்த நூலின் பொருளை உணராது தேவர்கள், திருமாலிடம் முறையிட் டார்கள். அப்பெருமான் இவ்வுலகில் நல்லறங்களை நிலை நிறுத்துவான் வேண்டி ‘வாசு’ என்பவரை மனத்தால் நியமித்தார் (இவரை ‘விரசு’ என்றும் சொல்வர்) அந்த வாசு ஆட்சியை வெறுத்துத் தவத்தை மேற்கொண்டதனால் அவன் மைந்தன் கருத்தமன் ஆட்சியை ஏற்றான்; அவன் சில காலம் ஆண்டு பின் தன் மைந்தன் அனங்கன் என்பானிடம் ஆட்சிக் கட்டிலை ஒப்படைத்துவிட்டுத் தவம் செய்யக் கானகம் சென்றான். அந்த அனங்கனோ நல்லாட்சி புரிந்து தருமத்தை நிலை நிறுத்தி, ‘நன்னிதி’என்ற தன் மகனிடம் (‘நிதி’ என்று சொல்வாரும் உண்டு) ஆட்சியைத் தந்து காட்டிற்குத் தவம் செய்யப் போயினான்.

நன்னிதி என்பவன் தன் முன்னோர் களுக்கு மாறாகக் கொடியவனாய் இருந் தான். தீயகுணங்கள் பல பெற்றிருந்தான். முனிவர்கள் அவனது வலத்தோளில் தருப்பையைத் தீக்கடை கோலாகக் கொண்டு கடைந்தனர். அவ்வாறு கடைந்ததன் பயனாகப் ‘பரமாசாரன்’ என்பான் தோன்றினான். நன்னிதியின் தோளிடத்துப் ‘பரமாசாரன்’ தோன்றியது போலவே அவன் எலும்புகளிலிருந்து விதாதன், தாதன் என்ற இருமைந்தர்கள் தோன்றினர். இவர்கள் பரமாசாரனின் தம்பியர் ஆவர்.

முனிவர்கள் பரமாசாரனுக்குத் திருமுடி சூட்டினர். அவன் தம்பியரைத் துணைவர் களாகவும், சுக்கிராச்சாரியாரை நல்லமைச்ச ராகவும் நியமித்து நால்வகைப் படைக ளோடு ஒரு நகரினையும் உருவாக்கிக் கொடுத்தனர். அந்தப் பரமாசாரனைப் போலவே அவனுடைய மரபினரும் தருமமுறைப்படி குடிமக்களின் வருவாயில் ஆறிலொரு பகுதியைத் தவறில்லாதபடி வசூலித்து, அவற்றை அம்மக்களுக்கே பயன்படுத்தினர். அரசு இல்லையேல் நாட்டில் நன்மையும் இல்லை. மாற்றாரால் தீமை நிகழ்ந்தே தீரும். மேலும் அரசன் என்பவன் திருமாலின் தோற்றமாவான். ஆகையால் மக்கள் அனைவரும் அவனைத் தொழுவர்.

வருணாச்சிர, மறையாச்சிர தர்மங்கள் பற்றிப் பீஷ்மர் கூறுதல்

தருமராசனே! அரசன் என்பவன் துறவோர்களையும், நான்கு வருணத்தார் களையும் முறையோடு பாதுகாக்க வேண்டும். அஃது எப்படி என்றால் கூறுகின்றேன் கேட்பாயாக :

பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர், (அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்) என்ற இந்த நான்கு வருணத்தார்களுக்கும் துறவோர்களுக்கும் பொதுவாகச் சில பண்புகள் இருத்தல் வேண்டும். அவை யாவன (1) அன்பு, (2) அருள், (3) பொறுமை, (4) வாய்மை, (5) புகழ் (6) நன்னடத்தை (நல்லொழுக்கம்). இனி நால்வகை வருணத்தார்க்கு இருக்க வேண்டிய பண்புகள் பற்றிக் கூறுகின்றேன்.

(1) அந்தணர் : வேதம் ஓதல், வேதத்தை

ஒதுவித்தல், யாகம் செய்தல், ஆசீர்வாதம் செய்தல், தவம் புரிதல், கடவுளைத் தொழல், அரசர்களின் நன்மைக்காக யாகாக்னி வளர்த்து யாகம் செய்தல், பரிசுத்தமானவர்கள் தானம் தருதலை ஏற்றல், தம்மினும் மேலோர்களுக்கு ஈதல் என்பன போன்றனவாம். (ஓதல், ஓது வித்தல். வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் எனத் தொல்காப்பியம் புறத் திணையியலில் ‘அறுவகைப்பட்ட பார்ப் பனப் பக்கமும்’ என்ற தொடரின் மூலம் எடுத்துக் காட்டுகின்றது.)

(2) அரசர்கள் : வேதம் ஓதல், வேள்வி ஆற்றல், வில்வித்தை முதலான அறிந்திடல் (ஓதல்) கொடியேந்திய படை முதலான வற்றைப் பாதுகாத்தல். போரில் வெற்றி பெறல் (அ) வீரசொர்க்கம் சேரல். உயிர் களைக் காத்தல், தானம் வழங்கல் என்பன போன்றனவாம்.(ஓதல், வேட்டல், ஈதல், படை வழங்கல், குடியோம்பல் எனத் தொல்காப்பியப் புறத்திணையியலில் ஐவகை மரபின அரசர் பக்கமும்’ என்ற தொடரின் மூலம் கூறுதல் காண்க).

(3) வைசியர் : பொருளைச் சேமித்தல், ஏர்த்தொழில் செய்தல், பசுக்களைப் பாதுகாத்தல், முன்னைய இருவரின் விருப்பத்திற்கேற்ப நடத்தல்.

(4) சூத்திரர் : இந்த மூவரின் விருப்பத் திற்கேற்ப ஏவல் செய்தல்.

பின்னைய இரண்டிற்குப் பதிலாகக் கீழ் வரும் இரண்டினைக் கூறுவர்.

(3) வாணிகர்க்குரிய ஆறுபக்கமாவன :

(1) ஓதல். (2) வேட்டல், (3)உழவு. (4) வாணிகம், (5) நிரையோம்பல், (6) ஈதல்.

(4) வேளாண் மாந்தர்க்குரிய ஆறுபக்க மாவன : (1) உழவு. (2) உழவொழிந்த தொழில், (3) விருந்தோம்பல், (4) பக்டு புறந்தருதல், (5) வழிபாடு, (6) வேதம் ஒழிந்த கல்வி.)

நால்வகை ஆசிரமங்கள் பற்றிப் பீஷ்மர் கூறுதல்

வேதங்களில் பகுக்கப்பட்ட ஆசிரம நிலைகள் நான்காகும், அவை : (1) பிரமச் சரியம், (2) கிருஹஸ்தம், (3) வானப் பிரத்தம், (4) சந்நியாசம்.

1. பிரம்மச்சரியம் : கற்க வேண்டியன கற்று விரதம் காத்து விவாகமின்றி இருக்கும் நிலையாம். இந்நிலைக் குரியன (1) விரதத்தை மேற்கொள்ளல். (2) இரந்துண்ணல் (பிக்ஷையால் ஜீவித்தல்), (3) ஆசார்யனுக்குப் பணிவிடை செய்தல், (4) உபநயனம் ஆனபின் வேதத்தை அத்யயனம் செய்தல்,

2. கிருஹஸ்தம் (இல்லறம்) : இல்லாளொடு செய்யவேண்டிய அறம். இல்லறம் எனப்படும். அதற்குரிய நிலைகள் (1) தன்னை நாடி வருகின்ற விருந் தினர்களை உபசரித்துப் பின் தானும் உண்ணல், (2) அறம்புரிதல் தானம் செய்தல். (3) தென் புலத்தார் பகர் கடன் புரிதல் மறுபிறப்பு இல்லாதபடி செய்யும் கருமமாகிய பிதிரர்க்குச் சொல்லப்பட்ட கடன்களைச் சரிவரப்புரிதல்.

3. வானப்பிரத்தம் : இல்லாளொடு காட்டிற்குச் சென்று அக்னி திகழ வைத்து ஓமம் செய்தல் -(1) காய் இலைகள், கனிகள் உண்ணுதல் உண்டி சுருக்கல்), (2) பிறர்க்கும் தனக்கும் நன்மை உண்டா கும் படி அறநூல்களையும் வேத நூல்களை யும் பயிலல், (3) மனைவி இல்லாமலும் இந்த ஆசிரமத்தை அனுஷ்டிக்கலாம். (4) குறித்த இடனன்றி போய்க் கொண்டே இருத்தல் நிரந்தர வாசம் இன்மை சிலர் குறித்த இடத்தில் தங்குதலும் உண்டு.

4. சந்நியாசம் (துறவறம்) : முற்றுத் துறத்தல் ஆகும். இதன் நிலைகள் (1) மண்,பொன்,பெண் ஆகிய மூவாசை களையும் துறத்தல், (2) ஓரிடத்தில் நிரந்தரமாகத் தங்கியிராமல் சஞ்சரித்துக் கொண்டே இருத்தல், (3) கொடுத்த உணவினை உண்ணல், (4) வாக்குவாதம் நீக்கி மெளனமாயிருத்தல் (தர்க்கம் ஒழிதல்), (5) மழித்தல், நீட்டலில் அக்கறை கொள்ளாதிருத்தல்.

இவ்வாறு பீஷ்மர் கூறிவந்தபோது தருமபுத்திரர், ‘பிதாமகரே! அரசரின்றி உயிர்கள் க்ஷேமமாக வாழ முடியாதா?” என்று ஒரு வினா எழுப்பினார். அதற்குப் பீஷ்மர், ”அரசே!’ அரசனையன்றி உலகத்துக்குச் சீரிய தெய்வம் வேறு எதுவும் இல்லை” என்று பதிலளித்தார். மேலும் அவர், “உலக உயிர்களைக் காத்தல். பகைவரை வெல்லுதல் ஆகிய இவை அரசர்க்குத் தவத்தினும் மேலானவாம் என்று வேத விற்பன்னர்கள் கூறுவர்” என்று கூறினார்.

உயர்ந்த கருத்துக்களையெல்லாம் பாட்டனாரிடமிருந்து கேட்டறிந்த தருமபுத்திரர் முதலானோர் அத்தினாபுரம் சென்று இரவு தங்கி, மறுநாள் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு மீண்டும் பிதாமகர் பீஷ்மரிடம் சென்று, அவரை வணங்கி நிற்க, பீஷ்மர், “தருமபுத்திரா! உன் மனத்திலுள்ள சந்தேகங்களை மேலும் கேள். தெளிவு படுத்துகிறேன்” என்று கூற தருமபுத்திரர் தன் மனத்திலெழுந்த சந்தேகங்களைக் கேட்கலானார். அவரும் கூறலானார்.

அரச நீதி உரைத்த சருக்கம்

1. ஓர் அரசனுக்கு, கொடி, குடை, பல்லியம் (பல வாத்தியங்கள்) கற்புடை மனைவி, பொருட் செல்வம், ஒற்றர், அறிவார்ந்த அமைச்சர், படை, வலிமை, குற்றம் செய்தவரைத் தண்டிக்கும் திறன் ஆகிய இருத்தல் வேண்டும். இவற்றுள் ஒன்று குறைந்தாலும் அரசனுக்குத் துன்பம் உண்டாகும். யானை, நாடு, ஊர், ஆறு, மலை, குதிரை, தானை, முரசு, தார், கொடி என்பன அரசனுக்குரிய தசாங்கங்கள் என்பர் நூலோர்.

பகைவெல்லும் வல்லமை படைத்த வீரர்களை, தன் பக்கம் சேர்த்துக் கொள்ளு தல் அரசர்க்குரிய உயர்ந்த பண்பாகும். அரசர்க்கு அறிவில்லாக் கீழ் மக்கள் சேர்க்கை இருத்தல் கூடாது. அவ்வாறு இருந்தால் அது அரசர்க்கே துன்பம் தரும்.

நல்ல மன்னர்கள் ஆள்கின்ற நாடு நீர் வளமும், நில வளமும் பெற்று இருக்கும். (நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரும் நாடு – குறள்) பகைவர்களை வெல்லும்படியான அரணும், அகழியும் மதிலும் இருத்தல் வேண்டும். அதோடு அந்நாட்டில் தாழ்விலாச் செல்வத்தைப் பெற்ற செல்வர்களும் இருத்தல் வேண்டும்.

அமைச்சர்கள் பற்றி…

அரசர்களைப் பற்றிக் கூறிய பீஷ்மர் அடுத்து அமைச்சர்களைப் பற்றிக் கூறலானார்.

2. அரசனுக்கு அமைச்சர்கள் இன்றி யமையாத ஒன்றாகும். அரசன் ஒருவனுக்கு அமைச்சன் இல்லாதிருப்பது பகற் பொழுதில் வைத்த தீபம் போல ஒளி மழுங்கியதாய் விடும். ஒரு செயலைச் செய்யும்போது அதற்கு வேண்டிய கருவி, அதற்கு ஏற்ற காலம், அதனைச் செய்யும் முறை,அம்முறையில் செய்யப்படும் அரிய செயல், ஆகிய இவற்றை மாட்சிமைப்பட பொருத்தமாக எண்ணிச் செய்ய வல்லவனே சிறந்த அமைச்சன் ஆவான். இத்தகைய அமைச்சன் அஞ்சாமை, நல்ல குடிப்பிறப்பு, அரசனைக் காக்குந்தன்மை, பலநூல்களைக் கற்றறிதலால் பெற்ற அறிவு, சமயோசித அறிவு முயற்சி ஆகியவற்றைப் பெற்றிருத்தல் வேண்டும்.

பகைவரால் துன்பம் ஏற்படின், அதனை விலக்குதற்குரிய முயற்சிகளைக் குறைவின்றிச் செய்தல் வேண்டும். பழுதுறு மந்திரி இருந்தால் அரசன் கெடுவதற்கு வேறு எதுவும் தேவையில்லை. ஆதலின் அறிவார்ந்த அரசனைப் பாதுகாக்கும்படி யானவனாக அமைச்சன் இருத்தல் வேண்டும். அதுமட்டுமன்று ஓர் செயலைச் செய்கின்ற காலத்தில் அரசன் தன் வலிமை, மாற்றான் வலிமை, இருவர்க்குத் துணை யாக வரும் வலிமை, செயல் வலிமை ஆகிய இவற்றை ஆராய்ந்து தன் வலிமை மிக்கதாயிருப்பின் அச்செயலைச் செய்தல் வேண்டும். பரம்பொருளாகிய ராம்பிரானே ராவணனை ஜெயிப்பதற்குக் குரங்குகளின் தலைவனாகிய சுக்கிரீவனின் உதவியை நாடினார் என்பதை நினைவில் கொள்க.

3. அரசர்கள் சான்றோர் நட்பைப் பெரிதாகப் போற்றல் வேண்டும். “தவறு செய்கின்ற காலத்து அத்தவற்றினை வற்புறுத்திச் சொல்லி, அத்தவற்றினை நீக்குகின்ற சான்றோர்களைத் துணையாகப் பெற வேண்டும். அத்தகைய சான்றோர் களைப் பெறாத பாதுகாவலற்ற மன்னன் கெடுப்பதற்குரிய பகைவர் இல்லையா யினும் தானே கெடுவான். அதுமட்டுமன்று தருமபுத்திரரே! நல்லார் ஒருவரின் நட்பி னைக் கைவிடுதலானது பலரது பகையைத் தாமே தேடிக் கெ கொள்ளுதற்குச் சமமாகும் என்பதை அறிவாயாக.”

கூடா நட்பின் தன்மை

4. அதனையடுத்துப் பீஷ்மர் கூடா நட்பின் தன்மையை ஒரு கதை மூலம் விளக்குகின்றார்.

ஓர் ஆலமரத்தில் வாழ்ந்து வந்த பூனையைப் பிடிக்க எண்ணி ஒரு குறவன் ஒரு பெரிய வலையை அம்மரத்தின் கிளைகளில் மாட்டிச் சென்றான். அவன் எதிர்பார்த்தபடியே அவன் சென்றபின் அந்தப்பூனை அந்த வலையில் அகப்பட்டுக் கொண்டு, விடுதலை பெற வழியறியாது விழித்துக் கொண்டிருந்தது.

அப்பொழுது கீழே இருந்த ஓர் எலியானது அந்தப் பூனையிடம், “ஐயா! ஒரு கீரியும் ஒரு கோட்டானும் என்னைத் துரத்தி வர, நான் உன்னிடம் சரண் புகுந்தேன். உன்னைக் கண்ட அவ்விரண்டும் ஓடிப்போயின இனி நீ என் நண்பனாக இருப்பின் வலையை அறுத்து உன்னை விடுவிக்கின்றேன்” என்றது. ”அப்படியானால் இப்போதே என்னை வலையிலிருந்து விடுவித்துவிடு” என்றது பூனை.

கெட்டிக்காரத்தனமுள்ள அந்த எலி, பூனையின் சொல்லுக்குச் செவி சாய்க்காது, “பூனையாரே! உயர்ந்தோரிடத்து நட்பு ஏற்படின் அவர்களை அண்டியிராது தீக்காய்வர்போல அகன்றும் அணுகாதும் இருக்க வேண்டும். அதுவே நீதியாகும். அதனால் குறவன் வருவதற்குமுன் உன்னை விடுவிக்கமாட்டேன். அவ்வாறு விடுவித் தால் எனக்குத்தான் துன்பம் உண்டாகும். எனவே குறவன் வந்தவுடன் கட்டாயம் உன்னை விடுவிக்கிறேன் “என்றது. குறவனும் வந்துவிட்டான். எலியும் வலையை அறுத்துப் பூனையை விடுவித்து விட்டது.

அப்பொழுது பூனை எலியிடத்து, “நாம் எப்பொழுதும் கூடி நண்பர்களாகவே இருப்போமே “என்றது. அதற்கு எலி பக்குவமாக, “பூனையாரே/ உன்னோடு நட்போடு இருப்பேனே தவிர கூடியிருக்க மாட்டேன். ஒரு காரியம் ஆற்றவேண்டிய சமயம் தவிர மற்ற நேரங்களில் நம்மைப் போன்று எதிர் எதிராக இருக்கின்றவர்கள் பிரிந்திருந்தால் இருவருக்கும் நல்லது” என்று கூறி கூடாநட்பின் தன்மையை எடுத்துக் காட்டியது.

அறிவுடைமை பற்றி…

5. அடுத்து அறிவுடைமை பற்றிக் கூறலானார்.(இதற்குப் பரிமேலழகர் “கல்வி கேள்விகளினாய அறிவோடு உண்மை அறிவுடையனாதல் என்று விளக்கம் தருகின்றார்) எந்த கருத்தை யார் சொன்னாலும் தனது சுய புத்தியைக் கொண்டு அது உண்மையா பொய்யா என்பதைத் தேர்ந்தறிதல் வேண்டும். ஏனெனில் உலகோர் தங்கள் தங்கள் நோக்கத்திற்கு ஏற்றவாறு உண்மை நிலை தனை. திரித்துக் கூறுவர். எதிரே வரக்கடவ தனை அறியவல்லாரே அறிவுடையா ராவார். பின் வருகின்ற விளைவுகளை அறியமாட்டாதார், கல்வி அறிவு அறிந்தும், உண்மை அறிவுடையார் ஆகமாட்டார் என்பதனை உணர்க.

அரசர்களுக்கு உரிய ஒழுக்கம்

6. அரசர்களுக்கு ஒழுக்கம் மிகமிக இன்றியமையாதது ஆகும். நல்லொழுக்கம் இல்லாதவர்கள் செல்வம் பெறமாட்டார் கள். போரில் வெற்றியும் பெற மாட்டார் கள். உயிர் நீங்கும் பொழுதும் கூட ஒழுக்கத்தைக் காக்க வேண்டும். அதாவது ஒழுக்கத்தை உயிரினும் நன்றாகப் பாதுகாக்க வேண்டும்.

தேச கால இயல்புகளால் ஒருவருக்குத் தம் ஒழுக்கத்தில் சிறிது தொய்வு வரலாம். அதனால் தவசிரேஷ்டர்களுக்குப் பழுது நேராது என்பதற்கு ஒரு கதையைக் கூறலானார்.

விசுவாமித்திரன் என்னும் கெளசிக முனிவன் தவம் செய்ய ஆரம்பித்த நாளில் அங்கு பன்னிரண்டு ஆண்டு காலம் மழை பொய்த்துவிட்டது. அதனால் உலகினர் அனைவரும் பசியால் மடிந்து போயினர். சிறந்த தவசிரேட்டனாகிய கெளசிக முனிவனும் பசியால் வாடி, ஒரு காட்டி லுள்ள குடிசையைக் கண்டான்.

நாயிறைச்சியைத் தின்ற விசுவாமித்திரன்

கடும்பசியின் காரணமாகக் கெளசிகள் அங்கிருந்த மாமிசத்தைப் ப பார்த்து, அதில் சிறிது உண்டு, தண்ணீரைச் வீரைச் சிறிது பருகினான். இதனை அறிந்த குடிசைக்குரிய புலையன், முனிவன் பாதங்களில் விழுந்து வணங்கி, ”ஐயனே! நீசனான நான் உண்ணும் நாயின் மாமிசத்தை, தவசிரேட்ட ராகிய தாங்கள் உண்ணல் தகுமோ? என்றான்.

அதற்குக் கெளசிகன், “உடம்பில் உயிர் இருந்தால் அல்லவா ஒழுக்கத்தைப் பேசுவது! அரிய தவத்தைச் செய்கின்ற முனிவர்களுக்கு இதுபோன்ற வழுக்கல்கள் பழுதினை ஏற்படுத்தா” என்றான். அதற்கு அந்தப் புலையன் பதில் பேசாது, “உமக் கேற்ற செயலைச் செய்க” என்று கூறினான்.

அதன்பின் அந்த விசுவாமித்திரன் அந்தப் புலையன் வைத்திருந்த நாயிறைச்சியை முழுவதும் தின்று தண்ணீர் குடித்துப் பசியாறினான். பசியாறியபின் தனக்கு எப்படி இந்தக் கொடிய பசி வந்தது? என்று சிந்தித்தான். பன்னிரண்டு ஆண்டுகள் மழையின்றிப் பசியால் உலகத்து உயிர்கள் மடிந்ததால், அவற்றின் பசிக்கொடுமை முனிவன் வயிற்றில் அழிபசியை எழுப் பியது என்னும் காரணம் உணர்ந்தபின் அவன் திரிகால ஞானியாதலின் மழைக்குத் தலைவனாகிய இந்திரனையும் மேகங்களையும் சினந்து நோக்கினான். அதனால் இந்திரன் மிக்க மழையைப் பொழிந்து உலகவுயிர்களை வாழ வைக்க, பிள்னர் விசுவாமித்திரன் தலம் செய்யக் செய்யச் சென்றான்.

இங்கு மேலோனாகிய கௌசிகள் புலால் மறுத்தலைக் கைவிட்டாலும், தன்னுடைய தவத்தினால் உலக உயிர் களைக் காப்பாற்றினான் என்பதனால் மேலோர் ஒழுக்கத்தில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும் அவர்கட்குப் பழுது நேராது என்பதனை இக்கதை மூலம் அறியலாம்.

செங்கோலின் மாட்சிமை

7. செங்கோலின் மாட்சிமை பற்றி மாந்ததா கதை மூலம் பீஷ்மர் விளக்கலானார்.

அங்க நாட்டினை ஆண்ட வசு என்னும் பெயருடைய அரசன் உலக வாழ்க்கையில் பற்றினை நீத்து, இமயமலையினை அடைந்து, கைப்பிடித்த மனைவியோடு வானப்பிரத்தாசிரமத்தில் நின்று தவம் புரிந்து வந்தான்.

அவனிடத்தில் சூரிய வமிசத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற மாந்தாதா என்னும் அரசன் வந்து,”தண்டனை வழங்குதற்குரிய நீதி சாத்திரங்களைப் பற்றித் தெரிவிப்பீ ராக” என வேண்டினான். அவனும் அந்த மாந்தாதாவிற்குத் தண்டனை முறைகளைப் பற்றிச் சொல்லிக் கொடுத்தான்.

”பிரம தேவன் ஒரு மகனைப் பெற்றான். அந்த மகன் யாகத்தைச் மகன் யாகத்தைச் செய்ய ஆரம்பித்து தது இமையவர்க்கு அவி கொடுத்தான். யாகத்தை முற்ற முடித்தற்கு முன்னரே நான்முகனுடைய மைந்தன் மறைந்தான். அதனால் நா நான்முகன் கோபித்து, சிவபெருமானிடமும், திருமாலிடமும் மைந்தன் மறைந்த செய்தியைக் கூறினான்.

சிவபெருமான் தண்டனை வழங்குதல் பற்றிக் கூறும் நூல் ஒன்றாக்கி, அந்தத் தண்ட நூலோடு நான்கு வேதங்கள், ஆறு சாத்திரங்கள், பதினெண் கினெண் புராணங்கள், நீதி சாத்திரம். தரும சாத்திரம், பரதசாத்திரம், ஆயுர்வேதம், தனுர்வேதம், மீமாம்சை, முதலான நூல்களையெல்லாம் திருமா லிடம் கொடுத்து, இந்நூல்களை உலகெ லாம் நிகழ்வுறப்பரப்பி, அவற்றில் கூறப் பட்டுள்ள நன்னெறிகளை, அமல்படுத்தாத வர்க்கு அரிய தண்டனைகள் கொடுத்து நல்லறம் காப்பாயாக” என்று கூறினான்.

“அப்பொழுது மறைந்த நான்முகன் மைந்தன் மீண்டும் வந்தான். விட்டுப் போன யாகத்தை முறையாக முடித்தான். அந்த யாகத்தின் போது திருமால், சிவபெருமான் கொடுத்த தண்ட நூல்களை இராவு என்பானிடம் கொடுக்க, அவன் மரீசியிடம் கொடுத்தான். மரீசியிடமிருந்து தண்ட நூல் முதலியவற்றை இந்திரன் பெற்றான். இந்திரனிடமிருந்து முனிவர்கள் முதலானோர் அறிந்தனர். இந்த விதமாக இந்தத் தண்ட நூல் உலகிற்கு வந்தது. இந்தத் தண்ட நூலுக்கு ஏற்ப தண்டனை ஈந்து ஆளும் அரசர்கள் இவ்வுலகிலும், மேலுலகிலும் மேன்மை பெற்று விளங் குவர்” என்று வசு சொல்ல, புகழ்வாய்ந்த மாந்தாதா அதனை அறிந்து கொண்டு தன் நகரத்திற்கு திரும்பி வந்து ஆண்டான்.

தண்ட நூல்கள்

இந்தத் தண்ட நூலோடு மனுதர்ம சாத்திரத்தின் சிறப்புத்தான் சாமதான பேத தண்ட உபாயங்களாகும். ஆகவே அரசன் தண்ட நூல்கள் கூறுகின்ற முறையில் நாட்டை ஆளுதலே செங்கோலாட்சி முறையாகும் என்பதனை நீ அறிந்து கொள் எனப் பீஷ்மர் தருமபுத்திரருக்குக் கூறினார். (அஃதாவது சாம, தான, பேத, தண்டம் என்னும் நால்வகை உபாயங்களையும் கடைபிடித்து ஆள்வதே செங்கோலாட்சி முறையாகும். (1) சாமம் -இன் சொற்கள் சொல்லல், (2) தானம் பகைவர் மனமகிழும்படி பொருள் போன்றவை கொடுத்தல், (3) பேதம் மென்மை யாகவும், வன்மை யாகவும் பகைவர் மனத்தை வேறுபடுத்தல், (4) தண்டம் பகைவர் மீது போர் தொடுத்து அழித்தல். இவற்றுள் இறுதி உபாயமாகிய தண்டத்தைப் பற்றிக் கூறுவதே தண்ட நூலாகும்.)

8. அடுத்து நால் வகை உபாயங் களையும் கடைப்பிடித்துச் செங்கோல் நடத்துதற்கு வலிமை (பலம்) வேண்டுமாத லின், அதனியல்பு கூறலானார். அந்த வலிமை நான்கு வகைப்படும். (1) தன் வலிமை, (2) மாற்றான் வலிமை, (3) துணை வலிமை, (4) வினை வலிமை என்பனவாம்.

இமயமலைச் சாரலில் இலவமர மொன்று ஓங்கி வளர்ந்து, பருத்து, திசை தொறும் கிளைகளைப் பரப்பி வலிமை மிக்கு இருந்தது. ஒருமுறை நாரதர் அங்கு வந்து, “நீ வாயுவின் சினேகிதத்தைப் பெறுவாயானால் உனக்கு மேலும் வலிமை ஏற்படும். இல்லையென்றால் எளிமைப் பட்டுவிடுவாய்” என்று எச்சரித்தார். அந்த இலவமரம் செருக்கு கொண்டு ‘வயிரம் பொருந்திய என்னுடைய வலிமைக்கு அந்த வாயுவின் வலிமை ஈடாகுமா?” எனச் சவால்விட்டது. அதற்கு நாரதர், “காற்று தன் வலிமையைக் காட்டும் போது உன்னுடைய வலிமையின் எளிமையை உணர்வாய் ” என்று கூறிச் சென்றுவிட்டார். இந்தச் செய்தியை வாயுவினிடத்து நாரதர் கூறிவிட்டார்.

வாயு நாரதர் கூறியதைக் கேட்டான். உடனே தன் பலம் கொண்டமட்டும் வீசி, அதன் கிளைகளை ஒடித்து வீழ்த்தினான். அதனால் இலவமரம் வலியொடுங்கி பணிவானச் சொற்களைக் கூறி வாயுவை மகிழ்விக்க முயன்றது. அப்பொழுது நாரதர் அங்கு வந்து, அந்த இலவமரத்தை இகழ்ந்து, புன் சிரிப்புச் செய்தார். இதிலிருந்து உலகில், வலிமை குறைந்தவர் பிறரால் பழிக்கப்படுவர் என்பது தெரிகின்றது. அதோடு பெருத்த வலிமை கொண்டோர் செருக்குக் கொண்டால் தாழ்வர் என்பது இலவமரத்தின் கதையி லிருந்து புரிகின்றது.

வருமுன் காவாதான் வாழ்க்கை

9. வருமுன்னர் காவாதான் வாழ்க்கை யானது நெருப்பின் முன் வைக்கப்பட்ட வைக்கோல் போர் போன்று அழிந்து விடும் மாறாக வருமுன் காத்துக் கொள்கின்றவன் வாழ்க்கை உயர்ந்து விளங்கும் என்றார். அதற்குரிய கதை :

ஒரு நீருள்ள மடுவில் மூன்று மீன்கள் வாழ்ந்தன. வெயில் காலம் வந்துற்றதால் மடுவிலுள்ள நீர் வற்றிப் போகலாயிற்று: அப்பொழுது வருமுன் காப்போனாகிய மீன். “நண்பர்களே! மடுவில் தண்ணீர் வெகுவாகக் குறைந்துவிட்டது. வலைஞன் வந்து விடுவாள். ஆதலின் நாம் வேறொரு நீருள்ள மடுவுக்குப் போய்விடலாம் வாருங்கள் ” என்று கூறி அழைத்தது. ஆனால் மற்ற இரண்டு மீன்கள் அதனை ஏற்கவில்லை. அதனால் வருமுன்காப் போன் மீன். “நீங்கள் எப்படியாவது போங்கள்; நான் போகிறேன்” என்று கூறி வேறொரு நீர் நிறைந்த மடுவுக்குச் சென்று விட்டது. மற்ற இரண்டு மீன்கள் சேற்று நீரில் இருக்கும்போது, வலைஞன் வந்து இரண்டு மீன்களையும் களையும் பிடித்துவிட்டான் அந்த இரண்டில் புத்திசாலி மீன் அவன் வலையைத் துண்டித்து மீண்டும் சேற்று நீருக்குள் புகுந்து மறைந்துவிட்டது. மூன்றாம் மீன் ஆபத்துவந்த பின்னும் காத்துக் கொள்ளும் திறனில்லாததால் வலைஞனிடம் மாட்டிக்கொண்டது. ஆதலின் அரசன் வருமுன் காப்போனாக இருக்கவேண்டும். பொதுவாக அறிஞர்கள் தமக்கு நேரக்கூடிய ஆபத்தின் அறிகுறியை முன்கூட்டியே உணர்ந்து அதனைப் போக்கிக் கொள்ள முயல்வர். அறிவிலார் அங்ஙனம் உணரமாட்டாது. அத்துன்பத் தினுள் அகப்பட்டு உழல்வர் என்று கூறினார்.

10. “வலிமை இல்லாத அரசன் வலிமையுடையவரை எவ்வாறு வெல் வான்?” என்று தருமபுத்திரர் கேட்சு, அதற்குப் பீஷ்மர் ஒரு நிகழ்ச்சி மூலம் உணர்த்தலானார்.

ஒருதரம் கங்கை நதி தன்னை நோக்கி வருதலை உணர்ந்த கடல், “கங்கையே! எனது கடற்கரையில் இருக்கும் மரம், செடி, கொடிகள் அழியாவண் அழியாவண்ணம் அலைகளை இருகரையிலும் வீசிக்கொண்டு வருவாயாக ” என்றது. அதற்குக் கங்கை, ”உன்னுடைய கடற்கரையில் நான் சேரும் சமயம் அங்கிருக்கின்ற மரம். செடி கொடிகள் தாழ்ந்து வணங்கினால் தலைதப்பும். அஃதாவது அவை உய்யும். அதற்கு மாறாகத் தலை நிமிர்ந்து தின்றால் அவை அடியோடு சாய்ந்து அழிந்துபோகும்.” என்று ஒரு முறை கூறியிருத்தலால்.

வலிமையற்ற மன்னர்கள் வலிமையுள்ள மன்னர்களுக்குப் பணிந்து இன்சொல் வழங்கி வாழ்ந்து போவர். அது அவர் கட்குப் பழிப்பாகாது. அங்ஙனம் பணியாத வர்கள் இறந்தொழிவர்” என்றார் .

அதன் பின்னர், தருமபுத்திரர் முதலா னோர் பிதாமகரிடம் விடைபெற்று அரண் மனைக்குச் சென்றனர்.

மகாபாரதம் – 57 பீஷ்மரைக் கண்ட சருக்கம்… நால்வகை ஆசிரமங்கள் பற்றிப் பீஷ்மர் கூறுதல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here