நல்ல நேரம் ~காலை 09.30 AM ~10.30 AM & 03.00 PM ~04.00 PM
ராகு காலம் ~பிற்பகல் 12 Noon ~01.30 PM
எமகண்டம் ~காலை 07.30 AM ~09.00 AM
குளிகை ~10.30 AM ~12 NOON
சூரிய உதயம் ~காலை 06.01 AM
சூரிய அஸ்தமனம் ~மாலை 06.22 PM
சந்திராஷ்ட்டமம் ~உத்திராடம்
சூலம் ~வடக்கு
பரிகாரம் ~பால்
இன்று ~ஶ்ரீ ராம நவமி
மேஷம்
மேஷம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.
மிதுனம்
மிதுனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
கடகம்
கடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். உத்தியோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.
சிம்மம்
சிம்மம்: குடும்பத்தில் விட்டு கொடுத்து போவது நல்லது. வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் விவாதம் வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
கன்னி
கன்னி: குடும்பத்தில் மனம் விட்டுபேசுவீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.
துலாம்
துலாம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பணிபுரியும் இடத்தில் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மனநிறைவு கிட்டும் நாள்.
தனுசு
தனுசு: சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிறுசிறு அவமானங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்து கொள்ள வேண்டாம். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.
மகரம்
மகரம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
கும்பம்
கும்பம்: சமயோசிதமாக பேசி சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.
மீனம்
மீனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் ரசனையை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்பை ஏற்பார்கள். புதுமை படைக்கும் நாள்.
பூஜை அறையில் எவர்சில்வரில் பூஜை பாத்திரங்களை வைக்கக் கூடாதது ஏன்? வீட்டில் உள்ள பூஜை அறை என்பது ஒவ்வொரு வீட்டின் ஆன்மிக மையமாக பார்க்கப்படுகிறது. ஒரு வீட்டின்...
பூஜை அறையில் என்ன செய்யலாம்! என்ன செய்யக்கூடாது? கையில் துளசியை வைத்திருந்தால் என்ன நடக்கும்? பூஜை அறையில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளலாம்....
பதினேழாம் நாள் போர்... சல்லியன் தேர்ப்பாகனாதல் 10றுநாள் பொழுது புலர்ந்தது. பொழுது புலர்ந்தவுடன், கர்ணன் துரியோதனனிடம் சென்றான். அவனிடம், கர்ணன், "அரசே! இன்றைய போரில் அர்ச்சுனனைக் கொன்...
கையெழுத்தும், அதனால் தீர்மானிக்கப்படும் அதிர்ஷ்டமும்! ஒருவரின் கையெழுத்து என்பது அவர்களின் தனிப்பட்ட அடையாளமாக மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்வில் முக்கியமான தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடியதாகும். பல வாஸ்து நிபுணர்களும் கைரேகை...
கடனில் சிக்கியவர்களுக்கு விடிவு தரும் ஏகாக்ஷி நாரியல் - வீட்டில் செழிப்பு பெருக எளிய ஆன்மிக முறைகள்! நாம் எவ்வளவு உழைத்தாலும், ஒரு சிலருக்கு பணம் எப்போதும்...
பதினைந்தாம் நாள் போர்.. துரோணர் வீழ்ந்தார் பீமன் மகன் கடோத்கஜனும், அர்ச்சு னனின் அருமைப் புதல்வர்கள் இரவானும், அபிமன்யுவும் பாண்டவர்களுக்காகப் பெரும் போர் செய்து தங்கள் இன்னுயிரைத்...