திங்கட்கிழமை, ஜூன் 27, 2022
  • Home
Viveka Bharathi | Tamil News | Latest Tamil News | Tamil News Live | Breaking News
  • Home
  • Aanmeegam
  • Business
  • Cinema
  • Crime
  • Health
  • india
  • Political
  • Sports
  • Tamil Nadu
  • World
  • Login
No Result
View All Result
Viveka Bharathi | Tamil News | Latest Tamil News | Tamil News Live | Breaking News
Home Health

அலுவலகத்தில் மேலதிகாரி எதிரியல்ல

vivekabharathi by vivekabharathi
மே 17, 2022
in Health
A A
0
அலுவலகத்தில் மேலதிகாரி எதிரியல்ல
24
SHARES
158
VIEWS

மேலதிகாரி என்பவர் தனக்கு கீழே பணிபுரியும் அனைவரையும் அனுசரித்து போக வேண்டிய கட்டாயத்தில் இருப்பார். ஒவ்வொரு சின்ன சின்ன தவறுகளையும் திருத்தி அலுவலகத்தை ஒழுங்குபடுத்த வேண்டிய பொறுப்பு அவருக்கு உண்டு.

மேலதிகாரிகள் என்றாலே ‘நம்மிடம் கடுமையாக வேலை வாங்குபவர்கள், எப்போதும் கடுகடுவென்று இருப்பவர்கள்’ என்பதுதான் பெரும்பாலான அலுவலக பணியாளர்களின் எண்ண ஓட்டமாக இருக்கிறது. அப்படி அவர் கண்டிப்புடன் நடந்து கொள்வதற்கு யார் காரணம்? எதற்காக அப்படி நடந்து கொள்கிறார்? என்று பலரும் யோசித்து பார்ப்பதில்லை. அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் ஏராளம்.

ஆனால் அதைப்பற்றி அவர்கள் சட்டென்று வெளியில் சொல்லமாட்டார்கள். தங்களுக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களை கண்காணிக்கும் பொறுப்பு அவர்களுக்கு இருப்பதுபோல, அவர்களும் கண்காணிப்பு வட்டத்திற்குள்தான் இருப்பார்கள். தங்களுக்கு அடுத்த மட்டத்தில் இருக்கும் உயர் அதிகாரிகளுக்கு பதில் சொல்லும் பொறுப்பு அவர் களுக்கு இருக்கிறது. ஒரு ஊழியர் தவறு செய்தால் கூட அது மேலதிகாரிக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும். அவர்தான் அந்த தவறுக்கு முழு பொறுப்பையும் ஏற்க வேண்டிய நிலை ஏற்படும். அதேவேளையில் தவறு செய்த ஊழியர் மீது கடுமை காட்டவும் முடியாது. ஏனெனில் மேலதிகாரி என்பவர் தனக்கு கீழே பணிபுரியும் அனைவரையும் அனுசரித்து போக வேண்டிய கட்டாயத்தில் இருப்பார். ஒவ்வொரு சின்ன சின்ன தவறுகளையும் திருத்தி அலுவலகத்தை ஒழுங்குபடுத்த வேண்டிய பொறுப்பு அவருக்கு உண்டு. ஊழியர்கள் செய்யும் சிறு சிறு தவறுகள் கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடும். அதற்கு தீர்வு காணும் பொறுப்பை சுமக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு அலுவலகத்திலும் மேலதிகாரிகளை நெருக்கடிக்குள்ளாக்கும் விஷயங்கள் நடந்து கொண்டிருக்கும்.

Related posts

சிலம்பம் மற்றும் அடிமுறை கழகம் சார்பில், சிலம்பம் பயிற்சி சிறப்பு முகாம்

ஜூன் 19, 2022
இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசி அறிமுகமானது

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசி அறிமுகமானது

ஜூன் 11, 2022

திருட்டு: அலுவலகத்தில் வாங்கும் ஸ்டேஷனரி பொருட்கள் காணாமல் போவது பொதுவாக எல்லா அலுவலகங்களிலும் நடக்கும் விஷயம். அதற்கு யாராவது ஒருசிலர் தான் காரணமாக இருப்பார்கள். அவர் களின் சுபாவம் வெளியே தெரியும்போது மதிப்பையும், மரியாதையையும் இழக்க நேரிடும். ரக்‌ஷன், ‘கஸ்டமர் கேர்’ பிரிவில் பணியாற்றும் ஊழியர். வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதற்காக அவர் வசம் ஒப்படைக்கப்படும் பரிசு பொருட்களில் சிலவற்றை யாருக்கும் தெரியாமல் தன் வீட்டிற்கு எடுத்து சென்றுவிடுவார். இந்த விஷயம் நீண்ட நாட்களுக்கு பிறகுதான் அலுவலக நிர்வாகத்திற்கு தெரியவந்தது. இந்த விவகாரத்தில் ரக்‌ஷன் மட்டுமின்றி மேலதிகாரியும் நெருக்கடிக்கு உள்ளானார். நிர்வாகத்திற்கு பதில் சொல்லும் கடமை மேலதிகாரிக்கு இருப்பதால் ரக்‌ஷன் மீது கோபம் கொண்டார். ரக்‌ஷன் துறை ரீதியான நடவடிக்கைக்கு ஆளானார். சக ஊழியர்களிடம் மதிப்பை இழந்தார்.

முக்கியத்துவம்: அலுவலகத்தில் தனக்கு தரப்பட்டிருக்கும் வேலையின் முக்கியத்துவத்தை புரிந்து நடந்து கொள்ளும் பொறுப்பு ஊழியர் களுக்கு இருக்கிறது. ரமேஷ் சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வந்துவிடுவார். அதேபோல பணி நேரம் முடிந்ததும் சில நிமிடங்கள் கூட தாமதிக்காமல் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுவிடுவார். இந்த இடைப்பட்ட நேரத்தில் தனக்கான வேலையை பற்றி சிந்திக்க மாட்டார். வேலை மீது ஆர்வம் இல்லாதவராக இருப்பார். எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் பணி நேரம் முடிந்துவிட்டால் அந்த வேலையை பாதியில் அப்படியே விட்டுவிட்டு புறப்பட்டுவிடுவார். அலுவலகத்திற்கு வருவதும், போவதும் மட்டும்தான் அவரை பொறுத்தவரை முக்கியமான பணி. வேலை இரண்டாம் பட்சம்தான். ஒருசில வேலைகளை குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் முடித்தாக வேண்டியிருக்கும். அதற்கு மேலதிகாரி தான் பொறுப்பேற்க வேண்டும். அதை புரிந்து கொண்டு ஊழியர்கள் பணிபுரிய வேண்டும். நேரத்தில் கவனம் கொள்வது போலவே வேலையிலும் கவனம் தேவை. வேலையை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்துவிட்டு கூட மேலதிகாரியிடம் பெர்மிஷனோ, விடுமுறையோ எடுத்துக் கொள்ளலாம்.

பேச்சு: ஊழியர்கள் வேலை நேரத்தில் பேசுவது, அரட்டை அடிப்பது என நேரத்தை வீணடிப்பது மேலதிகாரிக்கு பிடிக்காத விஷயம். இந்த பழக்கத்தை தொடரும்போது அது மற்ற ஊழியர்களின் வேலையையும் பாதிக்கும். வேலை செய்து கொண்டிருப்பவர்களின் கவனம் பேசிக்கொண்டிருப்பவர்கள் மீது பதியும். அதனால் வேலையில் தவறு எழக்கூடும். அலுவலகத்தின் அமைதியான சூழலும் பாதிப்புக்குள்ளாகும். ஆதலால் அலுவலகத்தின் அமைதியை பாதிக்கும் எந்தவொரு செயலையும் செய்யக்கூடாது. மேலதிகாரியை டென்ஷனாக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்று. அலுவலகத்தில் இதுபோன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டுவிட்டு, மேலதிகாரி தன் மீது கோபப்படக்கூடாது என்று எதிர்பார்ப்பது தவறானது.

அலுவலக ரகசியம்: அலுவலக ரகசியங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்வது ஆபத்தான விஷயம். குறிப்பாக வங்கி ஊழியர்கள் அலுவலக ரகசியங்களை பாதுகாக்க வேண்டும். மிகப்பெரிய குற்றங்கள் நடப்பதற்கு இதுபோன்ற அஜாக்கிரதையான பேச்சுகள் காரணமாக அமைந்திருக்கின்றன. இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டியது மேலதிகாரிதான். இத்தகைய செயலில் ஈடுபடும் ஊழியர்களிடம் தவறை புரிய வைத்து அவர்களை வழிநடத்துவது மேலதிகாரியின் கடமை.

கவனம்: மேலதிகாரிகளின் பேச்சை கவனமாக கேட்க வேண்டும். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை மனதில் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு தரும் முதல் மரியாதை. முக்கியமான மீட்டிங்கில் மேலதிகாரி அலுவலக தகவல்களை விளக்கிக்கொண்டிருப்பார். அந்த நேரத்தில் ஒரு ஊழியர் செல்போனில் ஆழ்ந்திருந்தால் அது நிச்சயம் மேலதிகாரிக்கு எரிச்சலை ஏற்படுத்தும். தம்மிடம் ஒப்படைக்கப்படும் முக்கியமான வேலையை எப்படி முடிக்க வேண்டும் என்பதை மேலதிகாரியின் பேச்சை கேட்டால்தான் புரியும். அந்த நேரத்தில் விளையாட்டுத்தனமாக இருந்துவிட்டு வேலையை தவறாக செய்யக்கூடாது. மேலதிகாரியின் பேச்சை கவனமாக கேட்பது ஊழியர்களின் முக்கிய கடமைகளுள் ஒன்றாகும். வேலையில் இருக்கும் குறை நிறைகளை விளக்கி சொல்லிக்கொண்டிருப்பார். அதை ஊழியர்கள் கவனமாக கேட்கும்போதுதான் சரிவர செயல்பட முடியும். தவறுகள் தவிர்க்கப்படும். தேவையற்ற மன அழுத்தம், டென்ஷன் எட்டிப்பார்க்காது.

வேலையில் ஈடுபாடு: திறமைசாலிகளாக இருந்தால் கூட ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும்போது கவனச்சிதறல் ஏற்படும். அலுவலக நேரத்தில் சொந்த வேலைகளை செய்வது, நண்பர்களுடன் செல்போனில் உரையாடுவது இவையெல்லாம் கவனச்சிதறலை ஏற்படுத்தும். நண்பருக்கு அனுப்ப வேண்டிய குறுஞ்செய்தியை சுரேஷ் தவறு தலாக மேலதிகாரிக்கு அனுப்பிவிட்டார். அதை பார்த்ததும் மேலதிகாரி கொந்தளித்துவிட்டார். முக்கியமான வேலையை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது சுரேஷின் செயல் மேலதிகாரியை கோபத்தில் ஆழ்த்தியது. சுரேஷை 7 நாட்கள் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். ஆதலால் அலுவலக நேரத்தில் அலுவலக பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். மற்ற பணிகளை செய்து மேலதிகாரியின் கோபத்திற்கு ஆளாகக்கூடாது.

வேலையை சரிவர செய்து முடிக்க முடியாமல் போகும்போது ஏதாவதொரு காரணம் சொல்லி தப்பிக்கவும் முயற்சிக்கக்கூடாது. குறிப்பாக உடல்நலக்குறைவை எப்போதும் காரணம் காட்டிக்கொண்டிருக்க முடியாது. இறுதியில் இவர் வேலை செய்ய தகுதியற்றவர் என்று தீர்மானித்து விடுவார்கள். சக ஊழியர்களை பற்றி எப்போதும் குறை சொல்லிக்கொண்டிருக்கவும் கூடாது. இது மேலதிகாரிக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.

பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்று யோசிக்க வேண்டும். மேலதிகாரி எப்போதும் சமரசம் செய்து கொண்டிருக்கமாட்டார். ஏதாவதொரு காரணம் சொல்லிக்கொண்டு மேலதிகாரியின் அறைக்குள் அடிக்கடி செல்வது, ஏகப்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்பது, ஆலோசனை செய்வது, அதற்கு அதிக நேரம் எடுத்து கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. ஊரடங்கு காலத்தில் அலுவலக பணிகளை வீட்டில் இருந்தபடியே செய்யும் சூழலில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

Previous Post

ஸ்ரீதேவி – ஒரு நிருபரின் டயரியிலிருந்து..!

Next Post

பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம்… செஞ்சியில் சர்வேயர் கைது

Related Posts

Health

சிலம்பம் மற்றும் அடிமுறை கழகம் சார்பில், சிலம்பம் பயிற்சி சிறப்பு முகாம்

ஜூன் 19, 2022
இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசி அறிமுகமானது
Health

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசி அறிமுகமானது

ஜூன் 11, 2022
வரலாற்றில் முதல்முறையாக கேன்சர் மருந்து சோதனை வெற்றி.. முற்றிலும் குணப்படுத்தும் புதிய மருந்து கண்டுபிடிப்பு!
Health

வரலாற்றில் முதல்முறையாக கேன்சர் மருந்து சோதனை வெற்றி.. முற்றிலும் குணப்படுத்தும் புதிய மருந்து கண்டுபிடிப்பு!

ஜூன் 8, 2022
நாட்டின் முதல் ஹோமோலோகஸ் கோவிட் தடுப்பூசி
Health

நாட்டின் முதல் ஹோமோலோகஸ் கோவிட் தடுப்பூசி

ஜூன் 8, 2022
ஆரோக்கிய உணவின்றி சாகும் மக்கள்
Health

ஆரோக்கிய உணவின்றி சாகும் மக்கள்

ஜூன் 7, 2022
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் ஞாபக மறதி
Health

உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் ஞாபக மறதி

ஜூன் 6, 2022
Next Post
பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம்… செஞ்சியில் சர்வேயர் கைது

பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம்... செஞ்சியில் சர்வேயர் கைது

இந்துத்துவ அமைப்பினரால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் வியாபாரி; நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தேர்வு!

இந்துத்துவ அமைப்பினரால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் வியாபாரி; நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தேர்வு!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

Nattamai Tamil Movie Full Movie HD || Viveka Bharathi Cinema

மார்ச் 12, 2022
கருத்து கணிப்பு

கருத்து கணிப்பு

மார்ச் 30, 2022
ஹிமாலயா நிறுவனத்தின் உரிமையாளர் ஒரு முஸ்லீம்… அவர் பேச்சைக் கேளுங்கள், சிந்தித்து எச்சரிக்கையுடன் இருங்கள்

ஹிமாலயா நிறுவனத்தின் உரிமையாளர் ஒரு முஸ்லீம்… அவர் பேச்சைக் கேளுங்கள், சிந்தித்து எச்சரிக்கையுடன் இருங்கள்

மார்ச் 30, 2022
மோடி இல்லாவிட்டால், இன்றைய இந்தியாவின் பொருளாதார நிலை எப்படி இருந்திருக்கும்…. முழு ஆதாரத்துடன்…  முன்னாள் கவர்னர் ஸ்ரீ ரகுராம் ராஜன் பரபரப்பு தகவல்

மோடி இல்லாவிட்டால், இன்றைய இந்தியாவின் பொருளாதார நிலை எப்படி இருந்திருக்கும்…. முழு ஆதாரத்துடன்… முன்னாள் கவர்னர் ஸ்ரீ ரகுராம் ராஜன் பரபரப்பு தகவல்

ஏப்ரல் 9, 2022

பதுங்கு குழிகளில் பாதுகாப்பாக இருங்கள்- உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்

0
சித்ரா பௌர்ணமி விரதம் அனுஷ்டிக்கும் முறைகளும், விரதத்தின் பயன்களும்

சித்ரா பௌர்ணமி விரதம் அனுஷ்டிக்கும் முறைகளும், விரதத்தின் பயன்களும்

0

தனுஷ்கோடி அழிந்த வரலாறு

0
அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓபிஎஸ்ஸை நீக்க திட்டம்?

அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓபிஎஸ்ஸை நீக்க திட்டம்?

0
அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓபிஎஸ்ஸை நீக்க திட்டம்?

அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓபிஎஸ்ஸை நீக்க திட்டம்?

ஜூன் 27, 2022

இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 1.275 கிலோ தங்கம் பறிமுதல்: 3 இலங்கை பெண்கள் கைது

ஜூன் 27, 2022

கடலூரை சேர்ந்த பெண் ஊழியருக்கு வலை

ஜூன் 27, 2022
ராஜபாளையம் அருகே மாவோயிஸ்ட் கைது

ராஜபாளையம் அருகே மாவோயிஸ்ட் கைது

ஜூன் 27, 2022

BROWSE BY CATEGORIES

  • Aanmeegam
  • Business
  • Chennai
  • Cinema
  • Crime
  • EXCLUSIVE
  • Health
  • india
  • Kanyakumari
  • Modi
  • Notification
  • Old Post
  • Political
  • Poll
  • POSCO
  • Sports
  • Tamil Nadu
  • Terrorism
  • Tirupati
  • vasthu
  • vivekabharathi
  • World

POPULAR NEWS

  • Nattamai Tamil Movie Full Movie HD || Viveka Bharathi Cinema

    1073 shares
    Share 429 Tweet 268
  • கருத்து கணிப்பு

    41 shares
    Share 16 Tweet 10
  • ஹிமாலயா நிறுவனத்தின் உரிமையாளர் ஒரு முஸ்லீம்… அவர் பேச்சைக் கேளுங்கள், சிந்தித்து எச்சரிக்கையுடன் இருங்கள்

    38 shares
    Share 15 Tweet 10
  • மோடி இல்லாவிட்டால், இன்றைய இந்தியாவின் பொருளாதார நிலை எப்படி இருந்திருக்கும்…. முழு ஆதாரத்துடன்… முன்னாள் கவர்னர் ஸ்ரீ ரகுராம் ராஜன் பரபரப்பு தகவல்

    36 shares
    Share 14 Tweet 9
  • 6 மணி நேரத்தில் 24 முட்டைகளைப் போட்ட அதிசயக் கோழி

    32 shares
    Share 13 Tweet 8
அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓபிஎஸ்ஸை நீக்க திட்டம்?
Political

அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓபிஎஸ்ஸை நீக்க திட்டம்?

ஜூன் 27, 2022
Crime

இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 1.275 கிலோ தங்கம் பறிமுதல்: 3 இலங்கை பெண்கள் கைது

ஜூன் 27, 2022
Crime

கடலூரை சேர்ந்த பெண் ஊழியருக்கு வலை

ஜூன் 27, 2022
ராஜபாளையம் அருகே மாவோயிஸ்ட் கைது
Crime

ராஜபாளையம் அருகே மாவோயிஸ்ட் கைது

ஜூன் 27, 2022
வங்கதேசத்தை வீழ்த்தும் நிலையில் வெஸ்ட் இண்டீஸ்
Sports

வங்கதேசத்தை வீழ்த்தும் நிலையில் வெஸ்ட் இண்டீஸ்

ஜூன் 27, 2022
மீண்டும் 4 ஆயிரத்தை தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு – மகாராஷ்டிராவில் உஷார் நிலை
india

நாட்டில் கோவிட் பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 94,420ஆக உயர்வு

ஜூன் 27, 2022
No Result
View All Result
https://www.youtube.com/watch?v=SmRyYHO4peM

Recent News

  • அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓபிஎஸ்ஸை நீக்க திட்டம்?
  • இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 1.275 கிலோ தங்கம் பறிமுதல்: 3 இலங்கை பெண்கள் கைது
  • கடலூரை சேர்ந்த பெண் ஊழியருக்கு வலை

Category

  • Aanmeegam
  • Business
  • Chennai
  • Cinema
  • Crime
  • EXCLUSIVE
  • Health
  • india
  • Kanyakumari
  • Modi
  • Notification
  • Old Post
  • Political
  • Poll
  • POSCO
  • Sports
  • Tamil Nadu
  • Terrorism
  • Tirupati
  • vasthu
  • vivekabharathi
  • World

Recent News

அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓபிஎஸ்ஸை நீக்க திட்டம்?

அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓபிஎஸ்ஸை நீக்க திட்டம்?

ஜூன் 27, 2022

இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 1.275 கிலோ தங்கம் பறிமுதல்: 3 இலங்கை பெண்கள் கைது

ஜூன் 27, 2022
  • Home

© Copyright - Viveka Bharathi {2022}. All Rights Reserved.

No Result
View All Result
  • Home
  • Aanmeegam
  • Business
  • Cinema
  • Crime
  • Health
  • india
  • Sports
  • Tamil Nadu
  • Political
  • World

© Copyright - Viveka Bharathi {2022}. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In